கிடைச்ச கேப்பில் ஜல்சா பண்ணிய பிரபல நடிகை.. திருமணத்திற்கு பின் சந்தி சிரித்த கள்ளக்காதல்

Actress Gossip News: ரசிகர்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு அழகு இருந்தாலும், நடிப்பினாலும் பெயர் வாங்கியவர் தான் இந்த நடிகை. சினிமாவில் இருந்து கொண்டும், உயிருக்கு உயிராய் ஒருத்தரை காதலித்து, அவரே திருமணம் செய்தவர் என்ற பாராட்டு இந்த நடிகைக்கு நிறையவே கிடைத்திருக்கிறது. ஆனால் திருமணத்திற்கு பின்பு தான் அம்மணியின் மொத்த கதையும் வெளியாகி இருக்கிறது.

குடும்ப குத்து விளக்கு, பெரிய இடத்து மருமகள் என இந்த நடிகையை தூக்கிக் கொண்டாடாத ஆட்களே இல்லை. உண்மையில் நடிகை பலே கில்லாடி ஆக இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மெண்டில் தாராளமாக புகுந்து விளையாடி இருக்கிறார். அதனால் தான் சீக்கிரமாகவே நம்பர் ஒன் இடத்திற்கும் வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் போதும் போதும் என சம்பாதித்த பிறகு, இப்படியே போனால் வாழ்க்கைக்கு சரி வராது என பெரிய இடத்து பையனை காதலிக்க தொடங்கினார். நடிகை பற்றி அரசல் புரசலாக அவருடைய காதலருக்கு சில விஷயங்கள் தெரியும் என்பதால் நடிகையை கண்ட்ரோலில் வைத்திருந்திருக்கிறார். நடிகையும் பயத்தில் கொஞ்சம் அடங்கியிருந்திருக்கிறார்.

நீண்ட வருட காதலுக்கு பிறகு நடிகையின் காதலர் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் வாங்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அம்மணியின் அந்தரங்க கதைகள் அவருடைய காதலரின் அப்பாவுக்கு கொஞ்சம் தெரியும் என்பதால் அவர் முடியவே முடியாது என நடிகையை ஓரம் கட்டி விட சொல்லி இருக்கிறார். அவருடைய காதலரும் வீட்டில் ஓகே சொல்லும் வரை காத்திருக்கலாம் என நடிகை இடம் சொல்லிவிட்டார்.

ஆடின காலும், பாடுன வாயும் சும்மா இருக்காது என்பது போல், காத்திருப்பு ஒரு சில வருடங்களை கடந்ததால், நடிகை முன்னணி ஹீரோ ஒருவரை வளைத்துப் போட்டிருக்கிறார். இருவரும் ஹோட்டல் ஹோட்டலாக சுற்றித்திரிந்து இருக்கிறார்கள். ஒரு ஹோட்டலில் நடிகையின் காதலரே இருவரையும் கையும் களவுமாக பிடித்ததாக கூட சொல்லப்படுகிறது.

மகனின் நீண்ட வருட காத்திருப்பை பார்த்த அவரின் அப்பா திருமணத்திற்கு எப்படியோ ஓகே சொல்லிவிட்டார். நடிகையும் வாலை சுருட்டி கொண்டு திருமண வாழ்க்கையில் கௌரவமாக வாழ்ந்து வருகிறார். இருந்தாலும் செஞ்ச தப்பு கர்மா போல் சுத்தும் என்பது போல் நடிகையின் அந்தரங்க காதல் கதைகள் ஒரு கட்டத்தில் வெளியாகி விட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்