திருமணத்திற்கு முன்பே ஒத்திகை பார்க்கும் நடிகை.. காதலனுடன் வெளிநாடு சென்ற ரகசியம்

தன்னுடைய நிறத்தால் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஒருவர் சினிமாவுக்கு வந்த புதிதில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்பு நடிகர் ஒருவருடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். இருவரும் நிச்சயம் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் வாரிசு நடிகரின் அப்பா இதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்.

தந்தை சொல்லே மந்திரம் என்று நினைக்கும் நடிகர் தனது வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுவிட்டார். இதனால் அப்சட்டான நடிகை படங்களில் அதிகம் கவனம் செலுத்த முடியாமல் இருந்தார். இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் மார்க்கெட் போனதால் அக்கடதேசத்திற்கு சென்று விட்டார். அங்கும் அவ்வப்போது ஒவ்வொரு படங்களை கொடுத்து வந்தார்.

Also Read : நடிக்க நாலு கோடி, படுத்தால் 7 கோடி.. திருமணத்திற்கு முன்பே ஒரு காட்டு காட்டி கேரியருக்கு பாலூத்திய நடிகை

இந்நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் ஒருவரின் படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதுவும் அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் ஆரம்பத்தில் கவர்ச்சி காட்ட மறுத்த நடிகை இப்போது தாராள கவர்ச்சி காட்டி வருகிறார். இதனால் அவரது மார்க்கெட் உயர்ந்திருக்கிறது.

இந்த சூழலில் முதல் காதல் தோல்வி உற்றாலும் இப்போது தன்னுடன் நடித்த நடிகர் ஒருவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார். இதற்கு காரணம் படத்திலேயே இவர்கள் இடையே நெருக்கமான காட்சிகள் இடம் பெற்று இருந்தது. அதனால் நிஜத்திலும் இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதாம்.

இப்போது திருமணத்திற்கு முன்பே ஒத்திகை பார்க்க வேண்டும் என்பதற்காக தனது காதலனுடன் ஹனிமூன் சென்றிருக்கிறாராம் நடிகை. இதனால் தான் வெளிநாடு சென்றிருக்கிறாரா என ரசிகர்கள் இப்போது வாயை பிளந்து இருக்கிறார்கள். மேலும் விரைவில் இவர்களது திருமணமும் நடக்க உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

Also Read : எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு நடிகையை நேக்காக கழட்டிவிட்ட ஆக்சன் ஹீரோ.. கல்யாணத்துக்கே வேட்டுவைத்த நடிகை

Next Story

- Advertisement -