காதல் என்ற பெயரில் வாழ்க்கையில் கபடி விளையாடிய ஹீரோக்கள்.. திருமணத்தையே வெறுக்கும் நடிகை

பாலில் ஊற வைத்த பன்னு போல் இருக்கும் அந்த நடிகை முதிர்கன்னி வயதான பிறகும் கூட திருமணம் செய்யாமல் இருக்கிறார். தான் உண்டு தன் வேலை உண்டு என ஒதுங்கி இருக்கும் அம்மணிக்கு கல்யாணம் என்றாலே வேப்பங்காய் கசக்கிறதாம்.

அந்த அளவுக்கு அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். காரணம் அவருடைய வாழ்க்கையில் இருந்த காதல்களும் அதனால் வந்த ஏமாற்றமும் தான். முதலில் பெரிய இடத்து பிள்ளையை காதலித்த அவர் எல்லை மீறியும் பழகினார்.

Also read: வாரிசு நடிகையால் கைநழுவி போன வாய்ப்பு.. விட்ட இடத்தை பிடிக்க நடிகை செய்யும் தந்திரம்

ஆனால் அது எப்படியோ லீக் ஆனதில் அவருடைய காதலும் புட்டுக் கொண்டு போனது. அதைத் தொடர்ந்து மற்றொரு நடிகருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆனால் அவரோ புத்திசாலித்தனமாக நடிகையை பயன்படுத்திக் கொண்டு கடைசியில் கழட்டி விட்டு விட்டார்.

இதனால் நொந்து போன நடிகை நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். ஆனால் அப்போது ஒரு டாப் ஹீரோவின் பார்வை இவர் மேல் விழுந்தது. கடைசியில் அவருடைய காதல் வலையில் சிக்கிய நடிகை சில காலம் அவருடன் வாழ்ந்தார்.

ஆனால் அதுவும் பாதியிலேயே முடிந்து போன நிலையில் தற்போது அவர் திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே டென்ஷனாகி விடுகிறாராம். எனக்கு கல்யாணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். நான் இப்படியே காலத்தை கழித்து விட்டு போகிறேன் என தன் குடும்பத்தாரிடம் கண்டிஷனாக சொல்லிவிட்டாராம். அந்த அளவுக்கு அவர் வாழ்க்கையை வெறுத்து போய் இருக்கிறார்.

Also read: கேரவனில் நடிகை உடன் டேட்டிங்.. ஓவர் ஆட்டம் போடும் இளம் நடிகர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்