Gossip: கண்ட இடத்தில் கை வைத்து சில்மிஷம் செய்த நடிகர்.. கோபத்தில் பத்ரகாளியாக மாறிய நடிகை

Gossip: கல்யாணம் ஆகி குடும்பத்தோடு இருக்கும் ஹீரோ பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக். அதனாலேயே சக நடிகைகளை தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து காரியத்தை சாதித்துக் கொள்வார்.

இப்படி எத்தனையோ நடிகைகள் அவருக்கு அட்ஜஸ்ட் செய்து இருக்கின்றனர். ஆனால் இளம் நடிகை ஒருவர் அவருடைய அழகை பார்த்து மயங்காதது நடிகரை வெளியேற்றி இருக்கிறது.

எப்படியும் அவரை அடைந்தே தீர வேண்டும் என பல வழிகளில் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் நடிகை கொஞ்சம் எச்சரிக்கையாகவே விலகி இருந்திருக்கிறார்.

ஆனாலும் நடிகர் பாடல் காட்சிகளில் கொஞ்சம் நெருக்கமாக நடித்து இருக்கிறார். இது நடிகைக்கு எரிச்சலாக இருந்தாலும் படம் முடியட்டும் என பொறுமை காத்தாராம்.

ஆனால் நடிகரோ சூட்டிங் முடிந்த பிறகு கூட நடிகை மீது மயக்கத்திலேயே இருந்திருக்கிறார். அதன் காரணமாக டப்பிங் பேசும் போது கண்ட இடத்தில் கை வைத்து சில்மிஷம் செய்து விட்டாராம்.

பொறுத்து பொறுத்து பார்த்த நடிகை இந்த செயலால் பத்ரகாளியாக மாறி இருக்கிறார். பெரிய ஹீரோ என்று கூட பார்க்காமல் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டி கழுவி ஊற்றி இருக்கிறார்.

இதனால் கடுப்பான ஹீரோ நடிகைக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை தயாரிப்பு தரப்பில் சொல்லி நிப்பாட்டி விட்டாராம். அதற்கெல்லாம் அசராத நடிகை சம்பள பாக்கியே வேண்டாம் என ஒரே போடாக போட்டு விட்டாராம்.

Next Story

- Advertisement -