விராட் கோலி மூக்கை உடைத்த அம்பத்தி ராயுடு.. ஒருமுறை கூட கோப்பை வாங்காத ஆர் சி பி

இந்த 2024 ஐபிஎல் சீசனும், ஆர்சிபி அணிக்கு கோப்பை வெல்லுவது கனவாகவே போய் உள்ளது. லீக் சுற்றில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் அதிக ரன் ரேட் அடிப்படையில், நான்காவது இடத்திற்கு முன்னேறி சென்னையை வெளியே தள்ளி, ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூர் அணி.

குவாலிபயர் போட்டிகளில் முதல் போட்டியில் கே கே ஆர் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதியது. அதில் கே கே ஆர் வெற்றி பெற்று அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருந்ததால் நேராக பைனல் சென்றது. இப்பொழுது சன்ரைசர்ஸ் அணிக்கு மட்டும் மற்றொரு குவாலிஃபயர் போட்டி இருக்கிறது.

நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் நடைபெற்ற இந்த போட்டி இறுதியில் ராஜஸ்தான் வெற்றி பெற்று அடுத்த குவாலிபியர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இப்பொழுது அந்த அணி அடுத்து சன்ரைஸ் அணியுடன் மோத உள்ளது

ஒருமுறை கூட கோப்பை வாங்காத ஆர் சி பி

ஏற்கனவே பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதியது இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆர் சி பி அணி கேப்டன் விராட் கோலி, ஏதோ கோப்பையை வென்றது போலையே நடந்து கொண்டார்.

சென்னை ரசிகர்களை வாயை மூடிக் கொண்டு வெளியே போங்கள் என்று செய்கை காட்டினார். இப்பொழுது ஆர்சிபி அணியும் எலிமினேட்டர் போட்டியில் தோற்று தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. விளையாட்டில் ஆக்ரோஷம் இருக்க வேண்டியதுதான் ஆனால் மற்றவர்களை இன்சல்ட் பண்ணும் படி அது இருக்கக் கூடாது.

விராட் கோலி அப்படிப்பட்டவர் தான். அந்த தகுதி இல்லாததனால் தான் இன்று வரை அவரால் கோப்பையை வெல்ல முடியவில்லை என அம்பத்தி ராயுடு அவர் மூக்கை உடைக்கும் படி பேசியுள்ளார்.

விராட் கோலியை வெறுப்பதற்கான காரணங்கள்

Next Story

- Advertisement -