திருமணத்துக்குப்பின் நடிக்க மாட்டேன் என முரண்டு பிடிக்கும் பிரபல நடிகை.. வருத்தத்தில் தயாரிப்பாளர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் இரண்டு பெயர் கொண்ட அந்த நடிகை. விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார் அந்த நடிகை. அவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்த சமயத்தில் திடீரென தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

இருப்பினும் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடிப்பேன் என அந்த நடிகை கூறிய பிறகுதான் அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதேபோல் அந்த நடிகையும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகை திடீரென படங்களில் நடிப்பதை தவிர்த்து வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது.

மேலும் புதிதாக கதை சொல்ல வரும் இயக்குனர்களிடமும் ஏதாவது ஒரு மொக்கை காரணம் கூறி கதையை நிராகரித்து வருகிறாராம். என்ன காரணமாக இருக்கும் என அனைவரும் குழம்பி இருக்கும் சமயத்தில் தான் நடிகை கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியானது. இது நடிகைக்கு மகிழ்ச்சியான செய்தி தான். ஆனால் தயாரிப்பாளர்களுக்கு அல்ல.

ஆம் நடிகை கர்ப்பமாக இருக்கும் செய்தி அவரை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்களுக்கு சற்று வருத்தத்தை தந்துள்ளதாம். ஏனெனில் அவர் கைவசம் வைத்துள்ள அரை டஜன் படங்களும் பாதியில் நிற்கின்றன. இதனால் படப்பிடிப்பை தொடர முடியாத சூழல் உருவாகி உள்ளது.

இதனால் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகிறார்களாம். சில தயாரிப்பாளர்கள் அந்த நடிகையை நீக்கி விட்டு வேறு நடிகைகளை நடிக்க வைக்கலாம் என முயற்சித்து வருகிறார்களாம். திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என கூறிவிட்டு இப்படி பின்வாங்குவது நியாயமா என தயாரிப்பாளர்கள் புலம்பி வருகிறார்கள். நடிகர்களுக்கு என்ன பிரச்னை பணம் போடுவது இவர்கள் தானே

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்