நயன்தாராவுக்காக மூன்று வருடங்கள் காத்திருந்த பிரபல நடிகர்.. கடைசியில் கனவு நிறைவேறிய சந்தோசம்!

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. சமீபகாலமாக கமர்சியல் படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களிலும் மாறி மாறி நடித்து வருகிறார்.

நயன்தாரா நடிப்பில் வெளியாகும் சோலோ ஹீரோயின் படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெறுவதால் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமில்லாமல் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து தற்போது பல படங்களை தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் அவர்களே தயாரித்து உருவாக்கிய திரைப்படம்தான் நெற்றிக்கண்.

இன்று ஹாட்ஸ்டார் தளத்தில் நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக வெளியானது. இந்தப் படத்தில் நயன்தாரா கண் தெரியாத நாயகியாகவும், நடிகர் அஜ்மல் பெண்களை விரட்டி விரட்டி வேட்டையாடும் கொடூர வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இதுகுறித்து அஜ்மல் நயன்தாராவின் இந்த படத்திற்காக கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் காத்திருந்து நடிக்க ஒப்புக் கொண்டதாக தெரிவித்துள்ளார். அஜ்மல் தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக அறிமுகமாகி சமீபகாலமாக வில்லனாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

காசுக்காக எந்தவொரு கதாபாத்திரத்தையும் ஒத்துக் கொள்வதில்லை எனவும், பின்னாளில் பெயர் சொல்லும் அளவுக்கு கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதிலேயே கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார் அஜ்மல். தமிழ் சினிமா கவனிக்கத் தவறிய ஹீரோக்களில் இவரும் ஒருவர்.

ajmal-cinemapettai
ajmal-cinemapettai

Next Story

- Advertisement -