தனுஷ் லயன் அப்பில் இருக்கும் 6 படங்கள்.. அவமானத்தை துடைக்க 24 மணி நேரமும் ஓய்வில்லாமல் ஓடும் குபேரன்

Dhanush Line Up Movies: பேரும் புகழையும் எப்படி தலைக்கு எடுத்துட்டு போக கூடாது அதே மாதிரி படுகிற அவமானத்தையும் தாண்டி போய்கிட்டே இருக்கணும் என்ற பாலிசிக்கு ஏற்ப தனுஷ் ஓடிக் கொண்டு வருகிறார். அதாவது பல சர்ச்சைகளில் சிக்கிய தனுஷ் தற்போது பாடகி சுசித்ரா சொன்னதைக் கேட்டு ரொம்பவே அதிர்ச்சியாக இருக்கிறது. அதாவது சமீபத்தில் திரை பிரபலங்கள் வரிசையாக விவாகரத்து கேட்டு வருகிறார்கள்.

அதற்கு பின்னாடியில் காரணமாக இருப்பது தனுஷ் தான் என்ற பேச்சுக்கள் அடிபடுகிறது. இவரைப் பற்றி தெரிந்ததால் தான் என்னமோ ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் வேண்டாம் என்று முடிவு எடுத்து விவாகரத்து கேட்டிருக்கிறார் போல. இப்படி தனுஷை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் வந்து அவருடைய இமேஜை டேமேஜ் பண்ணினாலும் அதெல்லாம் அசால்டாக தூசி போல தட்டிக் கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

SK இயக்குனரிடம் செல்ல சண்டை போட்ட தனுஷ்

அந்த வகையில் கிட்டத்தட்ட தனுஷ் கைவசம் ஆறு படங்கள் இப்போதைக்கு இருக்கிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை அடுத்து தனுஷின் ஐம்பதாவது படமான ராயான் படத்தை அவரை இயக்கி, எழுதி, நடித்து வருகிறார். இதில் இவருடன் சேர்ந்து பல பிரபலங்கள் நடித்துள்ளனர்,

எஸ்ஜே சூர்யா
செல்வ ராகவன்
பிரகாஷ்ராஜ்
வரலட்சுமி சரத்குமார்

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த மாதம் 13ம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். அடுத்ததாக தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் தனுஷ் கமிட் ஆயிருக்கிறார். இவருடன் சேர்ந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா கூட்டணி வைத்து இருக்கிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர் வெளியானதில் தனுசை பார்ப்பதற்கு வித்தியாசமான ஒரு அலங்கோல தோற்றத்தில் பாவப்பட்ட மனிதராக நிற்கிறார்.

இதனை அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் பயோபிக் கதையில் நடித்து வருகிறார். அடுத்ததாக மஞ்சுமால் பாய்ஸ் படத்தை எடுத்த இயக்குனர் சிதம்பரம் ப்ராஜெக்ட்டில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். அத்துடன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை தனுஷ் எழுதி இயக்கி நடித்து அதை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

இது மட்டும் இல்லாமல் எப்படி நீங்கள் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் அப்படி ஒரு படத்தை எடுத்து இருக்கிறீர்கள் என்று செல்ல சண்டை போட்டு அமரன் படத்தை எடுக்கும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் நடிப்பதற்கு தயாராகி விட்டார். இரண்டு நடிகர்களுக்கிடையே போட்டியில் ஆரம்பித்த பின் பொறாமையில் முடிகிறது இதுதான் போல. அதாவது சிவகார்த்திகேயன் கேரியரில் ஒரு டர்னிங் பாயிண்டாக படத்தை எடுத்து வரும் ராஜ்குமார் பெரியசாமி உடன் கூட்டணி வைக்கப் போகிறார்.

இப்படி கையில் வரிசையாக படங்களை வைத்துக்கொண்டு கொஞ்சம் கூட ஓய்வில்லாமல் 24 மணி நேரமும் ஓடிக்கொண்டே நடித்தால் மட்டும்தான் தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்க முடியும் என்ற பார்முலா படி நடித்துக் கொண்டு வருகிறார்.

தனுசுக்கு சுசித்ராவால் திருப்பி அடிக்கும் கர்மா

Next Story

- Advertisement -