சுந்தர் சி இப்போதெல்லாம் என்னை கண்டுகொள்வதே இல்லை.. வருத்தத்தில் 30 வயது இளம் நடிகை

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனராக வலம் வரும் சுந்தர் சியின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இளம் நடிகை ஒருவர் சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வரும் செய்து தான் இன்றைய கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்.

அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படம் வெளியாக உள்ளது. முன்னதாக வெளியான அரண்மனை, அரண்மனை 2 ஆகிய இரண்டு படங்களும் வெற்றியைப் பெற்றதால் மூன்றாம் பாகம் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

மற்ற இரண்டு படங்களை காட்டிலும் அரண்மனை 3 திரைப்படம் செமையாக வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி படத்தின் பிசினஸுக்கு பெரிய அளவில் உதவி வருகிறதாம். இதனால் சுந்தர் சி செம ஹேப்பி.

ஆனால் சுந்தர் சி யின் அரண்மனை படங்களில் பிரதான நாயகியாக வலம் வந்த ஹன்சிகா செம வருத்தத்தில் இருக்கிறாராம். சுந்தர் சி இயக்கிய தீயா வேலை செய்யணும் குமாரு, ஆம்பள, அரண்மனை, அரண்மனை 2 போன்ற படங்களில் பப்ளிமாஸ் நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர் ஹன்சிகா.

ஆனால் கடந்த சில வருடங்களில் தன்னுடைய உடல் எடையை முற்றிலும் குறைத்து எலும்பும் தோலுமாக மாறியதோடு மட்டுமல்லாமல் பார்ப்பதற்கும் வயதான தோற்றத்தில் இருப்பதால் அவரை சமீபகாலமாக ஒதுக்கிய வைத்துள்ளாராம் சுந்தர் சி. இதன் காரணமாகத்தான் அரண்மனை 3 திரைப்படத்திலும் வாய்ப்பு தரவில்லை என்கிறார்கள் சினிமா வட்டாரங்கள்.

இதைக் கேள்விப்பட்ட ஹன்சிகா, நான் நடித்ததால் தான் அவருடைய படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றது, ஆனால் இப்போது நான் கஷ்டப்படும் நேரத்தில் அவர் தன்னை கண்டு கொள்ளவில்லையே என வருத்தத்தில் இருக்கிறாராம்.

hansika-cinemapettai
hansika-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்