Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
சத்தமில்லாமல் இளம் நடிகருடன் காதல் வளர்க்கும் பிரபல நடிகை.. ரகசிய அழைப்பால் வெளிவந்த விஷயம்
தமிழில் பெரிய அளவில் வெற்றி படங்களை கொடுக்கவில்லை என்றாலும் ஓரளவு அறியப்படும் நடிகையாக வலம் வருபவர் தான் அந்த கொழுக் மொழுக் நடிகை. அந்த நடிகை நடித்த முதல் பேய் படமே அதிரிபுதிரி ஹிட் அடித்தது.
இதனால் அடுத்தடுத்து பல படவாய்ப்புகளை பெற்றார் அந்த நடிகை. அப்போது தான் மிருக நாயகனின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் அந்த நாயகி. திருக்குறளை தலைப்பாகக் கொண்ட அந்த படம் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை.
ஆனால் அந்த படத்தின் மூலம் அந்த நாயகிக்கும் நாயகனுக்கும் இடையில் காதல் மலர்ந்து விட்டதாம். இதனையடுத்து அடிக்கடி இரவு நேரங்களில் வெளியில் சுற்றி காதலை வளர்த்து வந்துள்ளனர். நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் இருவரும் ஒரு படத்தில் நடித்தனர்.
நாணயத்தை மையப்படுத்தி உருவான அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்க மேலும் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகி விட்டதாம். நீ இல்லாம நான் இல்லை நான் இல்லாமல் நீ இல்லை எனும் அளவுக்கு அன்பை பரிமாறிக் கொண்டார்கள்.
அந்த நடிகரோ அக்கட தேச இயக்குனரின் மகன். நாயகியும் தென்னிந்தியாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அந்த நடிகரின் அப்பா பிறந்தநாளை முன்னிட்டு அந்த நடிகையை வீட்டுக்கு அழைத்துள்ளார்.
அதன் மூலம் தன்னுடைய காதலை வீட்டுக்கு சொல்லிவிட்டாராம். வீட்டில் நடிகர் நடிகையை திருமணம் செய்து கொள்வதில் பெரிய உடன்பாடு இல்லையாம். பெரிய பிசினஸ்மேன் மகளை பேசி வைத்திருந்த நிலையில் நடிகர் இப்படி செய்தது குடும்பத்திற்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
சரி, இந்த காதல் போகிற போக்கில் போகட்டும் என பொறுத்துக் கொண்டு இருக்கிறார்களாம் வீட்டில் உள்ளவர்கள். என்றைக்கு நடிகர், நடிகை காதல் ஒன்று சேர்ந்து இருக்கிறது என நினைத்துக் கொண்டு வாக்குல போற கழுதைய அது போக்கில் போய் தான் சரி பண்ணனும் என விட்டு விட்டார்களாம்.
