நீ தான் என் கடைசி நம்பிக்கை.. 50 வயதில் கள்ளக்காதலுக்காக சாகத் துணிந்த கோபி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்திற்கு பிறகு கோபியுடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ முடியாது என அவரை வீட்டை விட்டு வெளியே போக பாக்யா சொல்கிறார். ஆனால் மகள் இனியா மற்றும் கோபியின் அம்மா ஈஸ்வரிக்கு இதில் உடன்பாடில்லை.

‘இந்த வீட்டிற்காக என்னுடைய உழைப்பை கொட்டி இருக்கிறேன். இதற்காக 40 லட்சம் செலவழித்ருக்கிறேன். அதைக் கொடு, நான் வீட்டை விட்டு வெளியே போகிறேன்’ என கோபி பாக்யுடன் வம்பு செய்கிறார். உடனே பாக்யாவும் அந்த 40 லட்சத்தை நான் ஒரு வருடத்தில் சம்பாதித்து கொடுக்கிறேன் என சபதமிடுகிறார்.

Also Read: துரோகம் செஞ்ச நீ வெளியே போகனுமா.? நா போகனுமா.? 

உடனே கோபியும் இனி இந்த வீட்டில் இருக்கக் கூடாது என முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். வெளியேறிய கோபி, நேராக ராதிகாவின் சந்தித்து பேசுகிறார். ராதிகாவுடன் சேர்ந்து வாழ்வதற்காக குடும்பத்தையே விட்டு விட்டு தற்போது நடுரோட்டில் அனாதையாகி விட்டேன்.

‘நீ தான் என்னுடைய கடைசி நம்பிக்கை. நீயும் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் செத்து விடுவேன்’ என கோபி ராதிகாவிடம் சொல்கிறார். அந்த சமயம் கோபியை ஏற்றுக்கொள்ள தயங்கும் ராதிகா, பாக்யாவிற்கு துரோகம் செய்வது போன்ற எண்ணமும் தோன்றுகிறது.

Also Read: எவ்வளவு அசிங்கப்பட்டாலும் அசராத ராதிகா.. மச்சக்கார கோபி அங்கிள்

இருப்பினும் கோபி தனக்காகத் தான் அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்திருக்கிறார் என்பதை ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டு ராதிகா கோபியை ஏற்றுக்கொண்டு அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.

இனிமேல் கோபி ராதிகாவின் வீட்டில்தான் தங்க போகிறார். ஆனால் இதையெல்லாம் பாக்யா கேள்விப்பட்டாலும் இதற்கு கொஞ்சம் கூட வருத்தப்பட மாட்டார் ஏனென்றால் திருமணமான 25 வருடங்களும் கொஞ்சம்கூடப் பாக்யாவை மரியாதையாக நடத்தாத கோபிகாக, துளிக்கூட பாக்யா கவலைப்பட மாட்டார்.

Also Read: டிஆர்பி-யில் அசுர பலத்தை காட்ட போட்டிபோடும் 5 சீரியல்கள்

மேலும் அவர் சபதமிட்டது போல் ஒரு வருடத்திற்குள் 40 லட்சத்தை கேட்டரிங் தொழில் மூலம் சீக்கிரம் சம்பாதித்து, அதை கோபியின் மூஞ்சியில் பாக்யா விட்டு எரிவதுடன் பெரிய தொழிலதிபராகவும் மாறப் போகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்