மேனேஜரால் தொக்கா மாட்டிய யோகி பாபு.. திருடனுக்கு தேள் கொட்டிய நிலைமை

விஜய், அஜித் போன்ற டாப் நடிகர்களைவிட இன்றைய தேதிக்கு கோலிவுட்டில் பிசியான நடிகர் என்றால் அது யோகிபாபு தான். இவரின் கால்ஷீட் டைரி நிரம்பி வழியும் அளவிற்கு ஒரே சமயத்தில் ஏகப்பட்ட படங்களில் ஒப்பந்தமாகி மிகவும் பிசியாக நடித்து வருகிறார் யோகி பாபு.

காமெடி நடிகர் என்றாலே அது யோகி பாபு தான் எனும் அளவிற்கு தமிழ் சினிமாவில் பெயர் பெற்று விட்டார். இப்படி காமெடி கிங்காக வலம் வந்து கொண்டிருக்கும் யோகி பாபுவின் மேனேஜர் மற்றும் ஓட்டுனர் ஆகிய இருவருக்கும் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் வைத்து கைகலப்பு ஏற்பட்டது. இது அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து நடிகர் யோகிபாபு அவர்களை வேலையில் இருந்து நீக்கிய கையோடு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இனிமே எந்த விஷயமாக இருந்தாலும் யாராக இருந்தாலும் நேரடியாக என்னை தொடர்பு கொள்ளுங்கள் இனிமேல் யாரும் என் மேனேஜரையோ அல்லது ஓட்டுனரையோ தொடர்பு கொள்ள வேண்டாம் என ஓப்பனாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மேலும் இந்த சம்பவத்தில் யோகிபாபுவின் மேனேஜர் பல லட்சங்கள் வரை கையாடல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை யோகிபாபு இதுகுறித்து காவல் நிலையத்தில் எந்தவித புகாரையும் அளிக்கவில்லை. தனக்கு துரோகம் செய்த மேனேஜர் மீது யோகி பாபு புகார் அளிக்காதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதற்கான காரணம் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி யோகி பாபு இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் இன்கம் டாக்ஸ் ரைடு போன்ற சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என்பதால் தான் புகார் அளிக்கவில்லையாம்.

சில லட்சங்களுக்கு ஆசைப்பட்டு நமக்கு நாமே எதுக்கு ஆப்பு வைக்கனும்னு பயந்து தான் யோகி பாபு புகார் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. அடப்பாவிகளா எஸ்கேப் அவதுக்கு இப்படி ஒரு வழி இருக்கா.? அதுக்காண்டி எவ்வளவு தப்பு செய்தாலும் மன்னித்துவிடலாமா.? ஒரு தப்பை மறைப்பதற்கு 100 பொய் சொல்ல தான் வேண்டும் என்பது யோகி பாபு விஷயத்தில் நிஜமாகி விட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்