மயிருக்கு இருக்கிற மரியாதை கூட நல்ல நடிகனுக்கு இல்ல.. மேடையில் யோகி பாபுவை வாரிவிட்ட பிரபலம்

சினிமாவை பொருத்தவரை திறமை இருந்தால் மட்டும் ஜெயித்து விட முடியாது. திறமையோடு சேர்த்து அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி சினிமாவில் திறமைகள் மூலம் ஜெயித்தவர்கள் ஏராளம் இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தது.

இன்று வரை சினிமாவில் திறமையான மனிதர்கள் எத்தனையோ பேர் கடுமையாக உழைத்து தான் வருகிறார்கள். ஆனால் யாருக்கும் பெரிய அளவில் வாய்ப்புகள் வருவதில்லை. ஆனால் ஒரு நேரத்தில் அதிர்ஷ்டம் வந்து விட்டால் வாய்ப்புகள் அவர்கள் நினைத்ததை விட அதிகப்படியாக கிடைக்கும்.

தமிழ் சினிமாவில் தற்போது காமெடி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் யோகி பாபு. ஒரு காலத்தில் பல படங்கள் நடித்து வந்தாலும் ஒரு கட்டத்திற்குப் பிறகு அதிர்ஷ்டம் இவரது வாழ்க்கையில் வந்த பிறகு தான் படவாய்ப்புகள் குவிந்தது. இதனை அவரே பலமுறை கூறியுள்ளார்.

சமீபத்தில் யோகி பாபுவிற்கு கோமாளி படத்திற்காக சிறந்த காமெடியன் விருது அளிக்கப்பட்டது. யோகி பாபு ஒரு முறை எனக்கு மூளை சோறு போட்டதை விட முடி தான் சோறு போட்டது என கூறினார். ராதாரவி பொருத்தவரை எப்போதுமே யாருக்காகவும் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக பேசுவார்.

ராதாரவி விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் மயிருக்கு இருக்கும் மரியாதை கூட நல்ல நடிகனுக்கு இல்லை எனக் கூறினார். மேலும் யோகி பாபு போல் முடி வளர்ப்பது நடிப்பது இன்றைய காலகட்டத்தில் நடக்காதது. அதற்காகவும் பாடுபட வேண்டும் எனக் கூறினார். மேலும் இன்றைய காலகட்டத்தில் தனக்கு சிறந்த கதாபாத்திரங்கள் கிடைப்பதாகவும் கூறினார்.

மேலும் எனக்கு உயிர் கொடுத்த தந்தை எம் ஆர் ராதா அவர்களுக்கும் பூமிக்கு என்னை அறிமுகப்படுத்திய தனலட்சுமி அம்மையாருக்கும், மேலும் இன்று வரை படத்தில் நடிப்பதற்கு காரணம் தமிழக நெஞ்சில் இடம் கொடுத்ததால் மற்றும் எனக்கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்