யோகிபாபு மீது வதந்தியை கிளப்பிய பிஸ்மி.. இதெல்லாம் ரொம்ப அநியாயம் இல்லையா?

கடந்த ஆண்டு வெளியான முக்கால்வாசி படங்களில் யோகிபாபு தான் நடித்திருந்தார். தற்போது முன்னணி ஹீரோக்களை விட இவர் தான் பிசியாக உள்ளார். மேலும் ஒரு நாளைக்கு ஆறு, ஏழு படத்திற்கு சூட்டிங் செல்லும் அளவிற்கு பிஸியாம். தற்போது ஹீரோக்களின் கால்ஷீட் கூட கிடைத்து விடும் போல யோகிபாபுவின் கால்ஷீட் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது.

மேலும் வடிவேலுக்கு சினிமாவில் நடிக்க ரெக்கார்ட் தடை விதிக்கப்பட்டதால் தற்போது யோகிபாபு வடிவேலின் இடத்தை பூர்த்தி செய்து வருகிறார். யோகி பாபு போறபோக்கில் அசால்டாக அடிக்கும் காமெடிக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது ஒரு சில படங்களில் யோகிபாபு கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இதற்கு ஒரு படி மேலாக தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார் யோகி பாபு. அதுவும் அட்லி இயக்கும் லயன் படத்தில் ஷாருக்கான் உடன் நடிக்கிறார். இந்நிலையில் வடிவேலு டெக்னிக்கை தற்போது யோகி பாபு ஃபாலோ செய்து வருகிறார் என்ற செய்தி வந்தது.

அதாவது வடிவேலு நடித்த காலத்தில் அவருடன் அசிஸ்டன்ட் ஆக வேலைபார்க்கும் நபரின் சம்பளத்தையும் தயாரிப்பாளரிடமிருந்து வடிவேலு தான் பெற்றுக்கொள்வாராம். அசிஸ்டண்ட்க்கு ஒரு சொற்ப தொகையை கொடுத்து விட்டு மீதி பணத்தை வடிவேலுவே வைத்துக் கொள்வாராம்.

அதேபோல் தற்போது யோகி பாபு அசிஸ்டன்ட் வாங்கும் சம்பளத்தை மொத்தமாகச் இவரே வாங்கிக்கொண்டு 500 அல்லது 1000 மட்டுமே அவருக்கு கொடுப்பார் மீதி பணத்தை யோகிபாபுவே வைத்து கொள்கிறார் என்று வலைபேச்சி பிஸ்மி கூறினார்.

ஆனால் விசாரித்ததில் இது அத்தனையும் உடான்ஸ் என்று கூறுகிறார்கள். ஆம் யோகிபாபு உதவியாளர் அகிலன் மற்றும் இன்னொருவருடன் பேசியதில் இது அத்தனையும் பொய். கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக கூடவே இருக்கிறோம் இதுபோன்று யோகிபாபு நடந்து கொண்டதே இல்லையாம். இதெல்லாம் விசாரிக்காமல் பிஸ்மி சொல்வது பெரும் மனவருத்தம்தான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்