நடிகர் விஜய்க்காக 500 கி.மீ., பயணம் செய்த யோகி பாபு.. எதற்காக தெரியுமா?

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. ஹீரோக்களுக்கு இணையாக அனைத்துப் படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இவர் இல்லாத படங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்து பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது இயக்குனர் ஹரி இயக்கி வரும் ஏவி 33 படத்தில் யோகி பாபு நடித்து வருகிறார். படத்தில் அருண்விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இராமேஸ்வரத்தில் இருந்த யோகிபாபு, உடனடியாக கிளம்பி, 500 கி.மீ., பயணம் செய்து சென்னை வந்துள்ளார். பீஸ்ட் படத்தில் நடிப்பதற்காக தான் அவர் உடனடியாக கிளம்பி வந்துள்ளார். விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட ஷுட்டிங், தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

yogibabu-cinemapettai
yogibabu-cinemapettai

பீஸ்ட் படத்தில் ஐந்தாவது முறையாக விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார் யோகிபாபு. ஏற்கனவே விஜய் நடித்த வேலாயுதம், சர்க்கார், மெர்சல், பிகில் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இருந்தாலும், சொன்னபடி நடித்து கொடுப்பதற்காக 500 கி.மீ., பயணம் செய்து வந்து உடனே ஷுட்டிங்கில் கலந்து கொண்ட யோகிபாபுவின் செயலை பார்த்து பீஸ்ட் படக்குழு மிரண்டு போய் உள்ளது.

பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட ஷுட்டிங்கில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், ஷைன் டாம் சாகோ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். விரைவில் விஜய்யும் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. அடுத்தடுத்து பல புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து கொண்டிருந்தாலும் தன்னால் ஷூட்டிங் பாதிப்படையக் கூடாது என்பதற்காக 500 கி.மீ., பயணம் செய்த யோகி பாபுவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்