நீ இன்னும் சாகலையா.. ரசிகரின் கேள்விக்கு கூலாக பதிலளித்த யாஷிகா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் யாஷிகா ஆனந்த். எதிர்பாராத விதமாக அவர் சில மாதங்களுக்கு முன்னர் மகாபலிபுரம் அருகே தனது காரில் சென்ற பொழுது விபத்துக்கு உள்ளானார். அதில் அவருடைய நெருங்கிய தோழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த யாஷிகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்தார். இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் பலத்த அடிபட்டு இருந்த காரணத்தால் என்னால் ஐந்து மாதங்களுக்கு எழுந்து நடக்க முடியாது என்று யாஷிகா தன் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.

இதனால் ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். அதன் பிறகு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த யாஷிகா சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

ஓரளவிற்கு உடல்நிலை தேறிய யாஷிகா கையில் ஸ்டிக்கின் உதவியுடன் மெதுவாக நடந்து பழகி வந்தார். தன்னுடைய உடல்நிலை பற்றிய தகவல்களை யாஷிகா அடிக்கடி போட்டோக்கள் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வந்தார்.

இந்நிலையில் யாஷிகா பல மாதங்களுக்குப் பிறகு ஒரு கடை திறப்பு விழாவிற்கு கையில் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் வந்தார். யாஷிகாவின் இந்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

ஆனால் இந்த போட்டோவை பார்த்த ஒரு ரசிகர், நீ இன்னும் சாகலையா என்று கமென்ட் கொடுத்துள்ளார். அதற்கு யாஷிகா எவ்விதமான கோபப்படாமல் நான் சீக்கிரம் சாவதற்கு இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் என்று கூலாக பதில் அளித்துள்ளார்.

ஒரு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு வந்துள்ள யாஷிகாவிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்ட அந்த நபருக்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்