Tamil Cinema News | சினிமா செய்திகள்
சாதி மறுப்பு திருமணம் : மகளை ஆணவக் கொலை செய்த பெற்றோர் கைது
மதுரை : மதுரை மாவட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை , பெற்றோர்களே ஆவணக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த வீராளம்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் . இவருக்கு சுகன்யா என்ற மகள் உள்ளார் .சுகன்யாவுக்கும் ஈரோட்டைச் சேர்ந்த பூபதிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.இருவரும் வேறு வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சுகன்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய சுகன்யாவும் பூபதியும், ஜனவரி மாதம் பெருந்துறையில் பதிவுத் திருமணம் செய்தனர். இந்தநிலையில் சுகன்யா, ஏப்ரல் 15ஆம் தேதி பூபதி மற்றும் அவரது பாட்டி பொன்னம்மாள் ஆகியோருடன் வீராளம்பட்டிக்குச் சென்றுள்ளார்.
அப்போது சுகன்யாவின் தந்தை பெரியகார்த்திகேயன் பூபதியையும் அவரது பாட்டியையும் அங்கிருந்து அடித்து விரட்டியுள்ளனர். பின்னர் பூபதியை மறத்து விடுமாறு கார்த்தியேகன் கூற அதற்கு மறுப்பு தெரிவித்த சுகன்யாவை அவரது பெற்றோரே எரித்து கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து பூபதி போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து சுகன்யாவை எரித்துக் கொலை செய்ததாக, சுகன்யாவின் தந்தை கார்த்திகேயன், தாய் செல்லம்மாள், அத்தை லட்சுமி, அண்ணன் பாண்டி ஆகியோரை கைது செய்துள்ளனர்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
