முட்டையால் அடிவாங்கி வெளியேறிய ராஜு, பிரியங்கா.. டிக்கெட் டு பினாலே டாஸ்கின் வின்னர் இவரே!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு பினாலே டாஸ்க் விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்தே நடைபெற்றுக்கொண்டிருக்கும் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் முதல் முதலாக நிரூப் வெளியேற்றப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து தாமரை மற்றும் பாவனி இருவரும் வெளியேற்றப்பட்டனர். இதன் பிறகு நேற்றைய நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட முட்டைகளை வைத்து, கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலாக யார் இருக்கிறார்களோ, அவர்கள் மேல் முட்டையை வீச வேண்டும் என பிக் பாஸ் அறிவித்தார்.

இவ்வாறு நடைபெற்ற டாஸ்கின் போது பெரும்பாலானோர் பிரியங்கா மற்றும் ராஜீவ் இருவரின் மீது முட்டையை வீசி, அந்தப் போட்டியில் இருந்து வெளியே தள்ளப்பட்டனர். இவ்வாறு டிக்கெட் டு பினாலே டாஸ்கிலிருந்து ராஜு மற்றும் பிரியங்கா வெளியேறுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், ‘யானை தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொண்டது போல்’ கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ராஜு மற்றும் பிரியங்கா இருவரும் அவர்கள் அவர்களது மீதே மூட்டையை பேசிக்கொண்டனர்.

இவ்வாறு போட்டியில், மற்றவர்களை போட்டியாளர்களாக நினைக்காமல் அவர்களை காயப்படுத்த கூடாது என்று ராஜு மற்றும் பிரியங்கா செய்த செயல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை குறைத்து விட்டது. குறிப்பாக ராஜு மற்றும் பிரியங்கா இருவரில் ஒருவர் தான் டிக்கெட் டு பினாலே டாஸ்கிங் வெற்றியாளர்கள் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அவர்கள் வெளியேற்றப்பட்டது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் தொடக்கத்தில் இருந்தே இந்த டாஸ்கை பொறுமையுடனும் நிதானத்துடனும் விளையாடிக்கொண்டிருக்கும் சிபி டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

மீதமிருக்கும் அமீர் மற்றும் சஞ்சீவ் இருவரும் வைல்ட் கார்ட் என்ட்ரி என்பதால் ஒருவேளை அதை வைத்தே அவர்களே வெற்றி பெறாமல் செய்வதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் பெண்கள் நடைபெறும் டாஸ்கிங் மூலம் யார் வெற்றியாளர் என்பது தெரிந்துவிடும் எனவே அதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை