மீண்டும் சூப்பர் ஸ்டார் படத்தை இயக்குவாரா மணிரத்தினம்.. சுவாரஸ்யமான பதில்

மணிரத்னம் தற்போது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்கள் உள்ள படமாக எடுத்த முடித்துள்ளார். முதல் பாகம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நேர்மையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தை போலவே இந்த படத்தின் ப்ரோமோஷன் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதற்காக ஜெயம் ரவி, திரிஷா, கார்த்தி, விக்ரம் போன்ற பொன்னியின் செல்வன் நட்சத்திரங்கள் பல நாடுகளுக்கு சென்று படத்திற்கு பிரமோஷன் செய்து வந்தார்கள். இந்நிலையில் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான மணிரத்தினமும் சில இடங்களில் பிரமோஷனுகாக சென்றிருந்தார்.

Also Read : பொன்னியின் செல்வன் படத்தை பார்ப்பது சாபக்கேடு.. வறுத்தெடுக்கும் ப்ளூ சட்டை மாறன்

மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் இறுதி புரமோஷன் மும்பையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மணிரத்தினத்திடம் மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணைவீர்களா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

அதாவது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் படத்தை மணிரத்தினம் இயக்குவாரா என்பதை எல்லோர் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் மணிரத்தினம் இயக்கத்தில் ஷாருக்கான் தில் சே அதாவது உயிரே படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Also Read : மணிரத்னம் மனதில் இடம் பிடித்தாலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நடிகை.. வட போச்சே சோன முத்தா

மேலும் மீண்டும் மணிரத்தினம் படத்தில் நடிக்க ஷாருக்கான் ஆர்வமாக உள்ளார். இப்போது அட்லி இயக்கத்தில் ஜவான் படாத்தில் ஷாருக்கான் நடத்து வருகிறார். ஜவான் படத்தை தவிர இரண்டு, மூன்று படங்களில் ஷாருக்கான் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த சூழலில் பொன்னின் செல்வன் ப்ரோமோஷனில் மணிரத்தினம் பேசுகையில் என்ன பொறுத்த வரையில் கதையை வைத்து தான் நடிகர்களை முடிவு செய்வேன். எப்போதுமே நடிகர்களை மனதில் வைத்து நான் கதை எழுத மாட்டேன். ஒருவேளை ஷாருக்கானுக்கு ஏற்ற கதை அமைந்தால் கண்டிப்பாக அவருடன் பணியாற்றுவேன் என மணிரத்தினம் கூறியுள்ளார்.

Also Read : கார்த்தி, மணிரத்னத்துடன் உதவி இயக்குனராக வேலை செய்த 3 படங்கள்.. அசால்டாக சமாளிக்கும் வந்தயத்தேவன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்