புருஷனையே கொலை செய்ய துடிக்கும் மனைவி.. சம்பவத்திற்குப் தயாரான கண்ணம்மா!

விஜய் டிவியில் கடந்த இரண்டு வாரங்களாக ராஜா ராணி 2 மற்றும் பாரதிகண்ணம்மா சீரியலின் மகா சங்கமம் நடைபெறுகிறது. இதில் பார்வதியை தீவிரவாதிகளிடம் இருந்து மீட்பது, போலி சாமியாரை கையும் களவுமாக பிடித்துக் கொடுப்பது என அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து சீரியலில் கூடுதல் விறுவிறுப்பு ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி சிவகாமிக்கு ஹார்ட் ஆபரேஷன் என இறுதியில் இந்த மகா சங்கமம் நிறைவடைகிறது. இதன் தொடர்ச்சியாக அடுத்த வாரத்தில் பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியே தன்னுடைய மகளுக்கு அம்மாவை காட்டப் போவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்.

முன்பு ஒருமுறை இப்படித்தான் லஷ்மியின் பிறந்த நாள் அன்று, அவள் தன்னுடைய அப்பாவை பார்க்க வேண்டுமென ஒற்றைக்காலில் நின்றதுபோல தற்போது ஹேமா அதேபோன்று தன்னுடைய அம்மாவை பார்க்க வேண்டுமென பாரதியிடம் பிறந்தநாள் பரிசாக கேட்கிறார்.

அனைவரின் முன்னிலையிலும் மகள் கேட்டதால் பாரதியும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் ஒத்துக்கொள்கிறார். உடனே குடும்பமே கண்ணம்மாவை பாரதி,  தன்னுடைய மனைவி என அறிமுகப்படுத்துவார் என்ற சந்தோஷத்தில் இருக்கிறது.

ஆனால் கண்ணம்மா மட்டும் பாரதியின் மீது கொலைவெறியுடன் இருக்கிறார். இவ்வளவு நாள் ஹேமாவிடம் அம்மா யார் என்பதை வெளிப்படுத்தாத பாரதி, இனிமேல் தன்னை காட்டு விடுவாரா என்ற எண்ணம் கண்ணம்மாவிற்கு தோன்றுகிறது.

மேலும் கண்ணம்மாவை விட்டுவிட்டு வேறு யாரையாவது ஹேமாவிடம் அம்மா என்று சொன்னால் நிச்சயம் ‘உங்க வீட்டில் ஒரு கொலை நடக்கும்’ என சௌந்தர்யாவிடம் கண்ணம்மா ஆக்ரோஷத்துடன் பேசுகிறார். இதைக்கேட்ட சௌந்தர்யாவும் ஆடிப் போய் நிற்கிறார்.

மகா சங்கமத்திற்குப் பிறகு பாரதிகண்ணம்மா சீரியல் சூடுபிடிக்க போகிறது. ஆனால் நிச்சயம் ஹேமாவிற்கு பாரதி, கண்ணம்மவை அம்மா என காட்டமாட்டார். சந்தேகப் பேய் பிடித்து ஆடும் பாரதி ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்க்க முடியாத முட்டாள் டாக்டராக இருக்கிறார் என சின்னத்திரை ரசிகர்கள் பாரதியை கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்