மாஸ்டரை கண்டுகொள்ளாத அட்லி.. காரணம் இதுதானாம்!

தமிழ் சினிமாவின் உச்ச நாயகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டைப் பெற்றது.

அதேபோல் மாஸ்டர் திரைப்படம் திரை அரங்குகளுக்கு புத்துயிர் அளித்த படமாகவும் திகழ்கிறது. மேலும் மாஸ்டர் திரைப்படத்தை பார்த்துவிட்டு திரைத்துறையினர் பலரும் படக்குழுவினருக்கும் தளபதி விஜய் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாஸ்டர் படம் வெளியாகி இத்தனை நாட்களாகியும் மாஸ்டர் திரைப்படத்தைப் பற்றி எந்த ஒரு பதிவையும் இயக்குனர் அட்லி வெளியிடாமல் இருப்பதற்கான காரணங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

அதாவது விஜயை வைத்து கிட்டத்தட்ட தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கி, அதில் வெற்றி கண்ட இயக்குனர்தான் அட்லி. கடைசியாக அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் சாதனை புரிந்தது.

இது ஒருபுறமிருக்க மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 16 நாட்களுக்கு மேல் ஆகியும், இன்றுவரை அட்லீ படத்தை பற்றியோ அல்லது விஜயின் நடிப்பை பற்றியோ எந்த ஒரு பதிவையும் போடவில்லை.

இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் குழம்பி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அட்லி விஜய்க்கும், மாஸ்டர் பட குழுவினருக்கும் வாழ்த்து கூறாததற்கு காரணம் இதுவாகத்தான் இருக்கும் என்று நெட்டிசன்கள் அடித்துக் கூறி வருகின்றனர்.

atlee-vijay-cinemapettai

 

தளபதியின் ஆஸ்தான இயக்குனராக இருந்த அட்லியை லோகேஷ் ஏதோ ஒரு விஷயத்தில் டாமினேட் செய்து விட்டாராம்.  இதனால் தான் தற்போது வரை மாஸ்டர் படத்தைப் பார்க்கவில்லை என்றும் அதை பற்றி விமர்சனங்கள் எதையும் அட்லி பதிவிட வில்லை. லோகேஷ்க்கு கொடுக்கப்பட்ட முன்னுரிமை தளபதி விஜய் அட்லீக்கு தற்போது கொடுப்பதில்லை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாஸ்டர் படம் அட்லி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் கூட விமர்சனம் செய்யாமல் இருக்கலாம். எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று யாருக்கு தெரியும். இதற்கான பதிலை அடுத்த படத்தில் தளபதியுடன் இணைந்து அட்லி கொடுப்பார் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்