விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் ஜாக்குலின். இவர் கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும், தொகுப்பாளராகவும் இவர் செய்த சேட்டைகளை ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது.
அந்த நிகழ்ச்சியில் பலரும் ஜாக்குலின் குரலை கிண்டல் செய்து வந்தனர். ஆனால் பின்பு அந்த குரலே அவருக்கு சாதகமாக மாறி தொகுப்பாளரின் வெற்றிக்கு வித்திட்டது என்றே கூறலாம்.
ஜாக்குலின் தொகுப்பாளராக பணியாற்றிய அதே சேனலில் தற்போது சின்னத்திரை நடிகையாகவும் ஜொலித்து வருகிறார். இவர் தற்போது தேன்மொழி எனும் சீரியலில் நடித்து வருகிறார்.
அதுபோக அப்பப்ப கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி படங்களிலும் நடித்து வருகிறார். முன்னணி கதாநாயகியாக நடிப்பதற்காக சில முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது ஜாக்குலின் ஒரு புதிய போட்டோஷூட் நடத்தியுள்ளார். இது அவர் பட வாய்ப்பிற்காக எடுத்ததா இல்ல ரசிகர்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக எடுத்தாரா என்பது பலருக்கும் கேள்வியாக உள்ளது.
இருந்தாலும் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து கருப்பு உடையில் ஜொலிக்கிறார் என பதிவு செய்து வருகின்றன. இதோ அந்த புகைப்படம்.
