ஆபிசிற்கு வந்தவர்களை தலைதெறிக்க ஓடவிடும் விஷால்.. உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா

நடிகர் விஷால் தயாரித்து, நடித்துள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் தற்போது வெளியாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர் துப்பறிவாளன் 2, மார்க் ஆன்டனி போன்ற பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவரை பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அவர் பிலிம் பேக்டரி என்ற ஒரு  நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார். இதனால் அவர் தன்னை சந்திக்க வருபவர்களுக்காக பிரத்யேகமாக ஆபீஸ் ஒன்றை வைத்துள்ளார்.

தற்போது அந்த ஆபீஸுக்கு விஷாலை சந்திக்க வரும் நபர்கள் அனைவரும் ஏன்டா வந்தோம் என்று தலைதெறிக்க ஓடுகிறார்களாம். ஏனென்றால் நாய் வளர்ப்பதில் அதிக பிரியம் கொண்ட விஷால் தற்போது கண்ணுகுட்டி அளவில் மூன்று நாய்களை வளர்த்து வருகிறாராம்.

அந்த நாய்களை அவர் வீட்டில் வைத்து வளர்க்காமல் தன்னுடைய ஆபீஸில் வைத்து வளர்த்து வருகிறார். பலரும் வந்து போகும் இடத்தில் அதை கட்டிப் போட்டால் கூட பரவாயில்லை, ஆனால் அவர் அதை செய்யாமல் அப்படியே அவுத்து விட்டு திரிய விடுகிறாராம்.

இதனால் விஷாலை சந்திக்க அங்கு வரும் பெரிய மனிதர்கள் எல்லாம் அந்த நாயை கண்டு அஞ்சி உள்ளே வரவே தயங்குகிறார்களாம். ஆனால் அங்கு இருப்பவர்கள் மிகவும் சாதாரணமாக யாரையும் கடிக்காது பயப்படாமல் வாருங்கள் என்று சொல்கிறார்களாம்.

இருந்தாலும் அங்கு வரும் நபர்கள் எப்போது வேணாலும் பாயலாம் என்று நிற்கும் நாயைப் பார்த்து கட்டிப்போட்டு வளர்க்க கூடாதா என்று ஆதங்கப்படுகிறார்கள். மேலும் உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா என்று நாயை திட்டுவதை விட விஷாலை அதிகமாக திட்டி விட்டு செல்கிறார்களாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்