இந்த சம்பளம் இருந்தா ஆபீஸ் பக்கம் வா.. விஷாலுக்கு கார்த்திக் சுப்புராஜ் சொன்ன பதில்

சினிமாவைப் பொருத்தவரை நடிகர்கள் யாரும் சம்பளத்தை குறைத்துக் கொள்வதே கிடையாது நாளுக்கு நாள் சம்பளத்தை ஏற்றி வரும் நிலையில் விஷால் மட்டும் தனது படத்திற்கு சம்பளம் குறைத்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

விஷால் வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை பிப்ரவரி மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதன் பிறகு விஷால், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்கு விஷால் முதலில் 15 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இதனால் தயாரிப்பாளர்கள் படத்தினுடைய பட்ஜெட் அதிகமாகிவிடும் என கூறியுள்ளனர். இதனால் கார்த்திக் சுப்புராஜ் விஷாலிடம் படத்தினுடைய பட்ஜெட் பற்றி கூறியுள்ளார்.

பின்பு விஷால் இப்படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தில் 1 கோடியை குறைத்து 14 கோடி வாங்கிக் கொள்வதாக தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பதற்காக தான் ஆர்வமாக இருப்பதாகவும் அதனால்தான் தனது சம்பளத்தை குறைத்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கார்த்தி சுப்புராஜ் வெற்றிப்படம் கொடுத்து நீண்ட நாள் ஆகிறது. அதேபோல் விஷாலும் வெற்றிப்படம் கொடுத்து பல நாள் ஆகிறது. அதனால் இவர்கள் இருவரும் இணைந்து ஏதாவது ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தால் மட்டும் தான் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்பதற்காக இணைந்துள்ளனர்.

இவர்களது கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மகான் திரைப்படத்தை பார்த்த பிறகுதான் இவர் இயக்கும் அடுத்த படத்தின் வெற்றியை கணிக்க முடியும் என பலரும் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை