விக்ரம் செய்யும் வேலைதான் படத்தையே திசை திருப்பும்.. பொன்னியின் செல்வன் சீக்ரெட்

மணிரத்னம் இயக்கத்தில் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படங்களில் 90 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன.

பாக்கியுள்ள படப்பிடிப்புக்காக தற்போது இந்தியா முழுவதும் காடு காடாக படையெடுத்துக் கொண்டிருக்கிறார் மணிரத்தினம். சமீபத்தில்தான் பொன்னியின் செல்வன் படத்தில் தன்னுடைய போர்ஷனை முடித்துக் கொடுத்தார் ஜெயம் ரவி.

அவரைத் தொடர்ந்து கார்த்தி மற்றும் திரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும் விக்ரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தின் கதை திசை திருப்புவதற்கு விக்ரம் செய்யும் கொலை தான் காரணம் என கூறுகின்றனர்.

விக்ரம் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை கொலை செய்த பிறகுதான் ராணியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய் அவரை பழி வாங்குவது என பொன்னியின் செல்வன் படத்தின் கதை படம் சூடு பிடிக்கும் எனவும் கூறுகின்றனர்.

சொல்லப்போனால் பாகுபலி போல விக்ரம் கொலை செய்வது போல் முதல் பாகத்தை முடித்து விட்டு அடுத்த பாகத்தில் மிச்சத்தை காட்டினாலும் காட்டுவார்கள் என்கிறார்கள் நம்ம ஊரு கோலிவுட் வாசிகள்.

பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பொன்னியின் செல்வன் படத்தின் வேலைகள் முடிந்து வருவதால் மணிரத்தினம் பேரானந்தத்தில் இருக்கிறாராம். மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ps1 2022ஆம் ஆண்டு வெளியாகும் என்பதையும் படக்குழுவினர் அறிவித்தனர்.

vikram-ponniyin-selvan
vikram-ponniyin-selvan
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்