கௌதம் மேனன் செயலால் கடுப்பான விக்ரம்.. இருவரின் சண்டையால் பாதியில் நின்று போன படம்

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெகுநாளாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் படமாக இருப்பது துருவ நட்சத்திரம் இந்த படத்திற்கான அறிவிப்பு 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்போது வெளியிடும் போது இந்த படத்தில் சூர்யா தான் நடிக்க இருக்கிறார் என்று கௌதம் மேனன் அறிவித்திருந்தார். ஆனால் 2016ஆம் ஆண்டு இந்த படத்தின் கதாநாயகனாக விக்ரம் நடிக்கவிருக்கிறார் என்றும் இந்த படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து தற்போது தயாராகிக்கொண்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார் கௌதம் மேனன்.

அதன் பிறகு இந்த படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. கௌதம் மேனனும் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடிப்பு, இயக்கம் என்று பிஸியாகிவிட்டார். விக்ரம் அவர்களும் வேறு வேறு படங்களில் நடித்து படங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. இந்த படத்தின் டீஸர் மட்டும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. இப்படி இருக்கையில் இந்த படத்தை எப்போது ரிலீஸ் செய்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த போது இந்தப் படம் இவ்வளவு தாமதம் ஆவதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது என்று கூறி ரசிகர்களை அதிர வைத்தனர்.

அது என்னவென்றால் இந்த படத்தில் நடிக்கும் விக்ரம் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இடையே ஏற்பட்ட உரசல் தான் காரணம் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. படத்தின் எடிட்டிங் வேலைகளை முடித்த கௌதம் மேனன் அதை விக்ரமிடம் காண்பிக்கவில்லை. இதனால் அப்செட் ஆன விக்ரம், நீங்கள் எப்போது காட்டுகிறீர்களோ அப்போது மீதி சூட்டிங்கை வைத்துக் கொள்ளலாம் என்று விக்ரம் படத்தை இழுத்தடித்து கொண்டு இருந்திருக்கிறார்.

வெகுநாளாக படத்தின் எடிட்டிங் ஒர்க்கை தன்னிடம் காட்டுங்கள் என்று விக்ரம் கேட்டும், இயக்குனர் கௌதம் மேனன் காட்டாமல் இருந்ததால் இந்த பிரச்சனை மெல்ல மெல்ல பெரிதாகி இருவருக்கும் இடையே பெரிய சண்டையாக வெடித்திருக்கிறது. கௌதம் மேனனுக்கு தேதி கொடுக்காமல் படப்பிடிப்பிற்கு வராமல் சில நாட்கள் கௌதம் மேனனை இழுத்தடித்து இருக்கிறார் விக்ரம்.

கௌதம் மேனன் தான் இந்த படத்தின் தயாரிப்பாளர் என்பதால் வேறு வழியின்றி கௌதம் மேனன் இறங்கி சென்று விக்ரமிடம் எடிட்டிங் ஒர்க்கை காட்டியிருக்கிறார். அதைப் பார்த்து வியந்துபோன விக்ரம் படம் மிக அருமையாக வந்திருக்கிறது என்று கூறி தற்போது படத்தின் வேலைகளில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

இப்பொழுது படத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இருப்பதால், அதில் தனது கவனத்தை செலுத்தி வருகிறாராம் விக்ரம். இதனால் இந்த துருவ நட்சத்திரம் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்