Tamil Cinema News | சினிமா செய்திகள்
விக்ரமின் 300 கோடி மெஹா பட்ஜெட் படம் தொடங்கியது.!
தமிழ் மலையாளம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் மகாவீர் கர்ணா இந்த படத்தின் பட்ஜெட் மட்டுமே 300 கோடி என அறிவித்திருந்தார்கள், இந்த படத்தில் இந்தியாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்கள் பலர் நடிக்கிறார்கள்.
மலையாள இயக்குனர் ஆர் எஸ் விமல் இயக்குகிறார் படத்தின் வசனங்களை பல எழுத்தாளர்கள் எழுதி வருகிறார்கள், அதில் தமிழ் பதிப்பை மட்டும் ஜெயமோகன் எழுதுகிறார் படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கும் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த யுனைடெட் ஃபிலிம் கிங்டம் நிறுவனமாகும்
இதுவரை படக்குழு விக்ரம் இல்லாத காட்சிகளை படமாக்கி வந்தது, விக்ரம் கடாரம் கொண்டான் திரைப்படத்தின் வேலைகளை முடித்த பிறகு தற்பொழுது விக்ரம் கர்ணா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார், இந்த படத்தின் இயக்குனர் விமல் அந்த நாள் வந்துவிட்டது தொடங்கியது மகாவீர் கர்ணா சீயான் விக்ரம் ஆக்ஷன் சொன்னது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது என கூறியுள்ளார்.
