11 வருடம் கழித்து நட்புக்காக ரீ-என்ட்ரி கொடுக்கும் விஜயகாந்த்.. யாருக்காக தெரியுமா.?

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் சகாப்தமாக விளங்கிய நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். ரஜினி கமல் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த தமிழ் சினிமாவில் அவர்களுக்கு ஒரு டஃப் போட்டியாளராக களமிறங்கி வெற்றி கண்ட நடிகர் என்ற பெருமையும் இவரையே சேரும். இவரின் பல படங்கள் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளது.

விஜயகாந்த் இறுதியாக 2010ஆம் ஆண்டு வெளியான விருதகிரி என்ற படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். அதன் பின்னர் கடைசியாக 2015ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தோன்றி இருப்பார். அதுதான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம்.

அதன் பின்னர் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு முழுநேர அரசியலில் இறங்கினார். அதுமட்டுமல்லாமல் அவரது உடல்நல கோளாறு போன்ற பிரச்சனை காரணமாகவும் அவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் விஜயகாந்த் நடிரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது விஜய் ஆண்டனி ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான சலிம் படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்படுகிறது. இந்த படத்தில் தான் விஜயகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் Infinity film ventures தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் சரத்குமாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைக்க, விஜய் மில்டனே ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் விஜயகாந்த் இணைந்துள்ள செய்தி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரத்குமார் நெருங்கிய நண்பர் என்பதால் இந்த படத்திற்கு ஒப்புக்கொண்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

vijayakanth-sarathkumar
vijayakanth-sarathkumar
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்