தொடர்ந்து 3 மணி நேரம் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்.. டிஆர்பியை தட்டித் தூக்கும் விஜய் டிவி!

விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியல் தற்போது அதிரடி திருப்பங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கோபியின் அப்பா சத்தியமூர்த்தி, ராதிகா மற்றும் கோபி இருவருக்கும் இடையே உள்ள உறவிற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஏனென்றால் சத்தியமூர்த்தி கோபியிடம் இனி ராதிகாவை பார்க்க பேசக்கூடாது. ராதிகா வீட்டிற்கு செல்லக்கூடாது என்று வீட்டில் உள்ள அனைவரின் மீதும் சத்தியம் வாங்கி உள்ளார். அவ்வாறே கோபியும் சத்தியமூர்த்திக்கு சத்தியம் செய்துள்ளார். இந்த நிலையில் இனிவரும் நாட்களில் கோபி ராதிகாவை சந்திப்பாரா? மாட்டாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழத் தொடங்கியுள்ளது.

இது ஒருபுறமிருக்க அமிர்தாவிடம் காதலை சொல்லி வெறுப்பை சம்பாதித்த எழில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் . எனவே இனி வரும் எபிசோடுகளில் எழிலுடைய காதல் அமிர்தாவின் மாமனார் மாமியாருக்கு தெரியவந்தது, அவர்களே எழிலுடன் அமிர்தாவை சேர்த்துவைக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்றும் ரசிகர்கள் கணிக்கின்றனர்.

இவ்வாறு விருவிருப்பான கதைக்களத்துடன் நகர்ந்துகொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் வரும் சனிக்கிழமை அன்று 3 மணி நேரம் சிறப்பு தொகுப்பாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. எனவே வரும் சனிக்கிழமையின் போது பாக்கியலட்சுமி சீரியல் மாலை 6 மணிக்கு துவங்கி 9 மணிக்கு முடிவடைய உள்ளது.

ஏனென்றால் வழக்கமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் 6.30 மணிக்கு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 ஒளிபரப்பாகும். ஆனால் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று மாலை 3 மணி துவங்கி நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் சரத்-கிருத்திகா என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

எனவே மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி நிறைவடையும் உள்ளதால் அடுத்த வாரம் அதே நேரத்தில் பாக்கியலட்சுமியின் 3 மணி நேர சிறப்புத் தொகுப்பு ஒளிபரப்பாக உள்ளது. இந்தத் தகவல் சின்னத்திரை ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. அத்துடன் விஜய் டிவி டாப் சீரியலை வைத்து டிஆர்பியில் முதலிடத்தைப் பிடிப்பதற்காக போட்ட பிளான் ஒர்க் அவுட் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்