திரும்பத் திரும்ப வாய்ப்பு கொடுத்தும் பிரயோஜனமில்ல.. விஜய் டிவி போட்ட மொத்த பிளானும் சொதப்பல்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் மக்கள் அளித்த வாக்கின் அடிப்படையில் ஒரு நபர் வெளியேற்றப்படுவார்கள். அந்தவகையில் இந்த வாரத்தில் நாமினேஷன் லிஸ்டில் இருந்த 10 பேரில், அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட உள்ளார்.

ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்திலிருந்து விளையாடிக் கொண்டிருந்த அபிஷேக் ராஜா, ஏற்கனவே ஒரு முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக தற்போது தான் இரண்டு வாரங்களுக்கு முன்பு என்ட்ரி ஆனார்.

எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் ராஜா இருந்தால், நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என்பதற்காகவும், டிஆர்பி ரேட்டிங் எகிறும் என்பதற்காகவும் கண்டெண்ட் கொடுக்கும் கன்டஸ்டன்ட் ஆன அபிஷேக் ராஜாவை விஜய் டிவி மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தது.

ஆனால் அந்தப் பிளான்ட் சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை. பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் சும்மாவே இருந்து ஆட்டத்தை ஒழுங்காக ஆடாத போட்டியாளர்கள் ஒருசிலர் ஆரம்பத்திலிருந்தே தற்போது வரை இருந்து கொண்டிருக்கும் நிலையில், ஏன் என்று தெரியவில்லை மக்களுக்கு அபிஷேக் ராஜாவை சுத்தமாக பிடிக்கவில்லை.

அவர் பிரியங்காவுடன் சேர்ந்து செய்யும் அழிச்சாட்டியத்தை பிக்பாஸ் ரசிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆகையால் வந்த வேகத்திலேயே மீண்டும் அபிஷேக் ராஜாவை வழி அனுப்பி வைத்துவிட்டனர்.

எனவே அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டில் இருந்து சென்ற பிறகாவது பிரியங்காவின் நடவடிக்கையில் பழைய போல் மாற்றம் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்