நெஞ்சில் குத்திய ஜீவா.. அம்பலமான ஜீவா-காவியா காதல்!

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே2 சீரியலில் காதலர்களாக இருந்த ஜீவா-காவியா இருவரையும் பிரித்து ஜீவாவை காவியாவின் அக்கா பிரியாவிற்கும், காவியாவை ஜீவாவின் அண்ணன் பார்த்திபனுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஒரே வீட்டிலேயே காவியா ஜீவாவும் இருப்பதால் தங்களது காதலை மறக்க முடியாமலும் திருமண வாழ்க்கையை ஏற்று வாழ முடியாமலும் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் காவியா பார்த்திபனுடன் சுத்தமாக வாழவே முடியாது என முடிவெடுத்து அவனிடமிருந்து விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி இருக்கிறாள். அந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த பார்த்திபன், ஆறுமாதம் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என கண்டிஷன் உடன் அதற்குள் காவியா தன்னை புரிந்துகொண்டு ஏற்றுக் கொள்வாள் என அவன் நம்புகிறான்.

இதற்கிடையில் ஜீவாவின் மாமா லிங்காவிற்கு ஜீவா-காவியா இருவரின் காதல் எதிர்பாராதவிதமாக தெரிந்துவிட்டது. இருப்பினும் ஜீவாவுடன் மாமா என்ற உறவு முறையை தாண்டி நட்பாகப் பழகும் லிங்கா, குடும்பத்திற்காக ஜீவா தன்னுடைய காதலை விட்டுக் கொடுத்ததை நினைத்து பெருமைப்படுகிறான்.

இருப்பினும் காவியாவை மறந்து பிரியாவுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால், காவியாவின் பெயரை நெஞ்சில் பச்சை குத்தி இருப்பதை அழைக்கும்படி லிங்கா ஜீவாவுக்கு அறிவுரை கூறுகிறான். இதன்பிறகு ஜீவாவும் தன்னுடைய நெஞ்சில் இருக்கும் காவியாவின் பெயரை அழிக்கிறான்.

ஏற்கனவே ஜீவா ஒரு பெண்ணின் காதலித்தாள் என்ற விஷயம் பிரியாவுக்கு தெரிந்த நிலையில், பச்சை குத்திய காதலியின் பெயரை அழித்ததது தெரிந்ததும் பிரியா ஜீவாவை அக்கறையுடன் பார்த்துக் கொள்வதுடன் சந்தோஷம் கொள்கிறாள்.

காவியாவின் அம்மாவுக்கு காவியா மற்றும் ஜீவா இருவரும் காதலித்த விஷயம் தெரிந்த நிலையில், தற்போது இரண்டாவது நபராக ஜீவா வீட்டுத் தரப்பில், ஜீவாவின் மாமா லிங்காவுக்கு தெரிந்திருப்பது ஈரமான ரோஜாவே2 சீரியலை சுவாரசியமாக கொண்டு செல்ல உதவும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்