முக்கிய சீரியலை பாதியில் நிறுத்திய விஜய் டிவி.. இனி TRP க்கு திண்டாட்டம்தான்!

சமீபகாலமாக அனைத்து டிவி சேனல்களும் புதிய புதிய சீரியல்களை தயாரித்து ஒளிபரப்ப தொடங்கியதால் நன்றாக சென்று கொண்டிருக்கும் பல சீரியல்களை திடீரென நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் பரபரப்பாகவும் ரசிகர்கள் ரசிக்கும்படியும் பேராதரவை பெற்று ஓடிக்கொண்டிருந்த சீரியல் ஒன்று புதிய சீரியலின் வரவால் தற்போது பாதியில் கைவிடப்படுகிறது.

சமீபகாலமாக விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களையும் தாண்டி சீரியல்களிலும் தன்னுடைய முத்திரையை பதித்து வருகிறது. மற்ற சேனல்களை விட விஜய் டிவியின் சீரியல்கள் குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் அமைந்து வருகிறது. ஏன் இளைஞர்கள் பலரும் கூட விஜய் டிவி சீரியல்களை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் இடம்பெற்று விஜய் டிவியில் சமீபகாலமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும். விஜய் டிவியில் காமெடி ஷோக்களில் பணியாற்றி வந்த வினோத் பாபு என்பவர் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் தேஜஸ்வினி கவுடா என்பவர் நாயகியாக நடித்து வந்தார்.

பழம்பெரும் நடிகை லதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சமீபகாலமாக லதா கதாபாத்திரத்தில் நடிகை நளினி நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நல்ல டிஆர்பி பெற்றுக்கொண்டிருந்த சீரியல் விரைவில் விஜய் டிவியில் புதிய சீரியல் ஒன்று வருவதால் பாதியில் முடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

sundarineeyum-sundaran-naanum
sundarineeyum-sundaran-naanum

இதனை சுந்தரி நீயும் சுந்தரன் நானும் குழுவினர் புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டனர். கடந்த சில மாதங்களாகத் தான் இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்