விக்ரம் படத்தில் என்னுடைய கேரக்டர் இதுதான்.. ரகசியத்தை போட்டுடைத்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி ஒரு நல்ல திறமையான நடிகர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதற்கு ஏற்றார் போல் அவரும் தன்னுடைய கதாபாத்திரங்களை மிகவும் நேர்த்தியாகவும், கவனமாகவும் தேர்ந்தெடுத்து வருகிறார். அதனால்தான் அவருடைய ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது கைநிறைய படங்கள் வைத்திருக்கும் விஜய் சேதுபதி, கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பகத் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார்.

அடுத்த மாதம் வெளியாக இருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லர், பாடல் வெளியீட்டு விழா போன்ற அனைத்தும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. அதற்கான வேலைகள் மற்றும் ப்ரமோஷன்களில் தற்போது படக்குழுவினர் படு பிஸியாகி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதி விக்ரம் திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து வெளிப்படையாக கூறியிருக்கிறார். இந்த படத்தில் பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் வில்லனாக நடித்து உள்ளனர் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது.

தற்போது அதைப் பற்றி குறிப்பிட்ட விஜய் சேதுபதி ஒரு மனிதனின் இருண்ட பக்கத்தை காட்டுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நான் வில்லனாக நடித்த படத்தை திரையில் பார்ப்பதன் மூலம் நிஜ வாழ்க்கையில் வாழ முடியாத ஒரு வாழ்க்கையை வாழ்வது போல் உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் திரையில் நடிக்கும் எந்த ஒரு வில்லன் கேரக்டரும் ஒரே மாதிரி இருக்க முடியாது. அதேபோல்தான் மாஸ்டர் மற்றும் உப்பென்னா திரைப்படங்களில் நான் எனது வில்லத்தனத்தை வித்யாசமாக காட்டியிருந்தேன். அந்த வகையில் விரைவில் வெளியாக இருக்கும் விக்ரம் படத்திலும் ரசிகர்கள் என்னுடைய வில்லத்தனத்தை மாறுபட்ட கோணத்தில் பார்க்கலாம்.

அதில் என்னுடைய வித்தியாசமான வில்லத்தனம் அனைவருக்கும் பிடிக்கும். ஒரு மனிதனின் மிக மோசமான பக்கத்தை நான் காட்டி இருக்கிறேன் என்று தன் கேரக்டரை பற்றி தெரிவித்துள்ளார். இதன் மூலம் விஜய் சேதுபதி நாம் சினிமாவில் இதுவரை பார்க்காத மிகக் கொடூர வில்லனாக நடித்திருக்கிறார் என்று தெரிகிறது. அதனால் தற்போது விக்ரம் படம் வேற லெவல் இருக்கப்போவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்