அடுத்தடுத்து தயாரிப்பாளர்களை காலி செய்த விஜய் சேதுபதி.. உதவி செய்ய வந்து உபத்திரவமான கதை

விஜய் சேதுபதிக்கு தற்போது நேரமே சரியில்லை. ஆரம்ப காலகட்டத்தில் இவருடைய படங்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால் இவருடைய கடந்த சில திரைப்படங்கள் படுதோல்வி அடைந்து இவருடைய மார்க்கெட்டை இறக்கியுள்ளது. தன்னைத் தேடி வரும் கதைகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு நடித்து வரும் இவருக்கு தற்போது அடுத்தடுத்த தோல்விகள் பெரும் பிரச்சனையாக மாறி இருக்கிறது.

அந்த வகையில் இந்த வருடத்தில் அவர் நடித்த படங்களில் விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படங்களைத் தவிர வேறு எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதிலும் கடந்த ஐந்து வருடங்களாக இவர் நடிப்பில் வெளிவந்த பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மோசமான தோல்வியை தழுவியது.

Also read: கெத்து காட்ட நினைத்த விஜய் சேதுபதி.. கடைசியில் மொத்தமாய் போன பரிதாபம்

இதன் மூலம் அந்தப் படத்தை எடுத்த தயாரிப்பாளர்கள் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்தனர். அதிலும் சில தயாரிப்பாளர்கள் இப்போது வரை மீண்டும் வர முடியாத நிலையில் இருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்தார் டிஎஸ்பி திரைப்படமும் வழக்கம் போல தோல்வி அடைந்தது. இதனால் விஜய் சேதுபதி இனி ஹீரோவாக நடிக்க முடியாது என்ற பேச்சுக்கள் இப்போது கிளம்பியுள்ளது.

வில்லனாக நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வரும் அவருக்கு இனி அந்த கேரக்டர்கள் தான் செட் ஆகும் என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர். உண்மையில் விஜய் சேதுபதியின் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் அவருடைய உதவி செய்யும் மனப்பான்மை தான். எப்படி என்றால் அவருக்கு நெருக்கமானவர்கள் அல்லது தெரிந்தவர்களை சினிமாவில் வளர்த்து விடுவதற்காக விஜய் சேதுபதி படம் நடித்துக் கொடுக்க சம்மதிக்கிறார்.

Also read: இன்னும் அவருக்கு மட்டும் வில்லனாக நடிக்காத விஜய் சேதுபதி.. இயக்குனரின் பதிலுக்காக காத்திருக்கிறேன்

இது உண்மையில் நல்ல விஷயம்தான். முன்னணி நடிகர்கள் யாரும் இதுபோன்று செய்வது கிடையாது. ஆனால் கதையைக் கேட்காமல் தன்னை நம்பி வந்து விட்டார்களே என்று அவர் படத்தில் நடிக்க சம்மதிப்பது தான் அவருக்கு பின்னடைவாக மாறியுள்ளது. இப்படி அவர் உதவி செய்ய போய் அது உபத்திரவமாகவே மாறி இருக்கிறது.

பழக்கத்திற்காக இவர் படங்களில் நடித்துக் கொடுத்ததால் தான் தயாரிப்பாளர்கள் இப்பொழுது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இனிமேல் அவர் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்றும், உதவி செய்தாலும் கொஞ்சம் கவனமாக இருங்கள் என்றும் ரசிகர்கள் அவருக்கு கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

Also read: வர வர செட்டே ஆகாத ஹீரோயிஸம்.. தொடர் நடிப்பால் விஜய் சேதுபதிக்கு வந்த வினை

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்