முதல்வரின் ஆட்சி குறித்து வெளிப்படையாக கூறிய விஜய் சேதுபதி.. அதுவும் யாரிடம் சொல்லியுள்ளார் தெரியுமா?

தமிழ் திரை உலகில் மக்கள் செல்வன் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி. அவரது எளிமையான தோற்றமும், ரசிகர்களிடம் சகஜமாகப் பழகும் விதமும் அனைவருக்கும் இவரை பிடிக்கும் காரணமாக உள்ளது. இவரை பிடிக்காதவர்கள் என யாருமே இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதியிடம் அடுக்கடுக்காக பல கேள்விகள் கேட்டுள்ளனர். அப்போது 65 நாட்கள் முதல்வரின் ஆட்சி எப்படி இருக்கிறது என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “ரொம்ப சிறப்பா பண்ணிட்டு இருக்காரு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் மட்டுமல்லாமல் எனது நண்பர்கள், வாகன ஓட்டுநர், உதவியாளர், பொதுமக்கள் என அனைவரிடமும் முதல்வர் ஆட்சி குறித்து கேட்பேன்.

அவர்களும் இதைத்தான் சொல்லுவாங்க . இதை நான் முதல்வரை சந்தித்த பொழுது நேரடியாகவே கூறினேன்” என கூறியுள்ளார்.

vijaysethupathi-mumbaikar-cinemapettai-01
vijaysethupathi-mumbaikar-cinemapettai-01

இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள், “மனுஷன் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்கிறார் இப்படி ஒருவரை யாருக்கு தான் பிடிக்காமல் போகும் திரையிலும் சரி திரைக்கு வெளியிலும் சரி தனது நேர்மையை கடைப்பிடிக்கும் ஒரே நடிகர் இவர்தான்” என புகழாரம் சூட்டி வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்