இரண்டே வார்த்தையில் கர்ணன் படத்தை புகழ்ந்து தள்ளிய விஜய் சேதுபதி.. ஈகோ இல்லாத மனுஷன்!

கர்ணன் படத்தை பற்றி தான் ஊரே பேசிக்கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு ஒரு தரமான படத்தை மாரி செல்வராஜ் தனுஷுக்கு கொடுத்துள்ளதாக தனுஷ் ரசிகர்கள் கர்ணன் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

சமீபகாலமாக பெரிய நடிகர்கள் அனைவரும் மாஸ் படங்களின் மூலம் மிகப்பெரிய வசூலைக் குவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தனுஷ் மட்டுமே தன்னுடைய வித்தியாசமான கதையை தேர்வின் மூலம் மாஸ் நடிகர்களுக்கு இணையான வசூலைக் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் முதல் நாளே தமிழ்நாடு முழுவதும் கர்ணன் திரைப்படம் 11 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷின் சினிமா கேரியரில் அதிகபட்ச ஓபனிங் கலெக்ஷன் கர்ணன் தானாம்.

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலரும் கர்ணன் படத்தை முதல் நாள் முதல் காட்சியை கண்டு களித்தனர். அதோடு நிறுத்தாமல் தொடர்ந்து தங்களுடைய சமூக வலைதளம் பக்கங்களிலும் கர்ணன் படத்தை பற்றிய விமர்சனங்களை கொடுத்து வந்தனர்.

அந்த வகையில் விஜய் சேதுபதியும் கர்ணன் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் தெரிவித்துள்ளார். தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள நடிக்கத் தெரிந்த நடிகர்களில் முக்கியமானவராக இருக்கும் விஜய் சேதுபதி கர்ணன் படத்தை பார்த்துவிட்டு, மிகச் சிறப்பான திரைப்படம், எஸ் செய்யாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளது தனுஷ் ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது.

vijaysethupathi-tweet-about-dhanush-in-karnan
vijaysethupathi-tweet-about-dhanush-in-karnan

விஜய் சேதுபதியின் நடிப்புக்கு பல ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் விஜய் சேதுபதி எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் தனுஷின் நடிப்பைப் போற்றிப் புகழ்ந்துள்ளது கோலிவுட் வட்டாரங்களில் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பதிவுக்கு பல்லாயிரம் குவிந்துள்ளன.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்