அண்ணே! என்னை விட்டுவிடுங்கள்.. பரிதவித்து போனிலே கெஞ்சிய விஜய் சேதுபதி

சினிமா ஹீரோக்களில் இப்பொழுது ரொம்ப பிசியாக இருப்பது விஜய் சேதுபதி தான். கிட்டத்தட்ட வருடத்திற்கு ஏழெட்டுப் படங்களை வாரி இருக்கிறார். யார் வந்து கதை சொன்னாலும் முதலில் ஓகே சொல்லுபவர் இப்பொழுது ஒரு முக்கியமான கண்டிஷனை போட்டு இயக்குனர்களை தெறித்து ஓட செய்கிறார்.

வரிசையாக படங்களை கையில் வைத்திருக்கும் விஜய்சேதுபதி அதையெல்லாம் முடித்தபிறகு இனி புது படங்களில் கமிட் ஆகலாம் என்ற எண்ணத்தில் தற்போது தன்னைத் தேடி வரும் இயக்குனர்கள் அனைவரிடமும் தலையில் இடி விழும் மாறி ஒரு கண்டிஷன் போடுகிறார். நீங்கள் குறைந்தது மூன்று வருடங்களாவது காத்திருக்க வேண்டும் நாம் அவ்வளவு பிஸி என்று.

இந்நிலையில் விஜய் சேதுபதி சூரி நடித்து கொண்டிருக்கும் படம் விடுதலை. இந்த படத்தை வெற்றிமாறன் எடுத்து கொண்டிருக்கிறார் . இன்னும் பல ஆண்டுகள் எடுப்பார் போல் தெரிகிறது. வெற்றிமாறன் படத்தை முடிந்த பாடில்லை அவ்வளவு மெனக்கெட்டு படம் நேர்த்தியாக வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்.

இன்னும் திருப்தியடையாத வெற்றிமாறன் விஜய் சேதுபதி மற்றும் சூரிக்கு போன் போட்டு இன்னும் ஒரு முப்பது நாள் கால்ஷீட் கேட்டிருக்கிறார். இதற்கு முன்னரும் திருப்தியடையாத வெற்றிமாறன் ஏற்கனவே அவர்கள் இருவரிடமும் மீண்டும் மீண்டும் கால்ஷீட் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுதும் போனில் கால்சீட் கேட்ட வெற்றி மாறனிடம், ‘அண்ணன் தயவு செய்து என்னை விட்டுடுங்க’ என்று கெஞ்சிஉள்ளார் விஜய்சேதுபதி. ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் படத்தை முடித்துக் கொடுப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் போது, மீண்டும் மீண்டும் வெற்றிமாறன் கால்ஷீட் கேட்பது விஜய்சேதுபதிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

இருப்பினும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக இருக்கும் வெற்றிமாறனின் எண்ணத்திற்கு கொஞ்சம் வளைந்து கொடுத்து போவதுதான் விஜய்சேதுபதிக்கு இருக்கும் ஒரே வழி. அதனால் விடுதலை படத்திற்காக விஜய் சேதுபதி கூடுதலாக மெனக்கெடும் நிலை ஏற்பட்டுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்