விஜய் சேதுபதியுடன் 5வது முறையாக கூட்டணி அமைத்துள்ள பிரபல இயக்குனர்.. இந்த படம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே சமீபகாலமாக கோடிக்கணக்கில் வசூலை வாரி குவித்து வருகின்றனர். அதனாலேயே பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் விஜய்சேதுபதி தங்கள் படத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.

ஆனால் விஜய் சேதுபதி எந்த நடிகரின் படம், எந்த இயக்குனர் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது கொடுக்கும் கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதை மட்டும் பார்த்துவிட்டு நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வருகிறார்.

ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்த விஜய்சேதுபதி மாஸ்டர் படத்தில் வில்லனாகவும் களமிறங்கி அதிலும் வெற்றி கண்டார். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் விஜய் சேதுபதி பிரபலமானார். அதன் பிறகு இவருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து கொண்டு இருக்கின்றன.

karthik subbaraj vijay sethupathi
karthik subbaraj vijay sethupathi

மேலும் ஹிந்தியில் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிப்பதற்கு பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இப்படி ஒரு பக்கம் படம், மற்றொரு பக்கம் வெப்சீரிஸ் என பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதியை வைத்து 4 படங்களை எடுத்த இயக்குனர் 5வது முறையாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது விஜய் சேதுபதி முதன் முதலில் வெற்றியடைந்த திரைப்படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா திரைப்படம்தான். அந்த திரைப்படத்திற்கு பிறகு இறைவி, ஜிகிர்தண்டா மற்றும் பேட்ட ஆகிய படங்களில் நடித்தார். அதன்பிறகு இவர்களது கூட்டணியில் எந்த படங்களும் வெளியாகாமல் இருந்தது.

தற்போது ஐந்தாவது முறையாக கார்த்திக் சுப்புராஜ் விஜய்சேதுபதியை வைத்து ஒரு படத்தை எடுக்க இருப்பதாகவும் அதற்கு விஜய் சேதுபதியும் சம்மதித்து உள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சில நாட்களில் இதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் போற போக்கை பார்த்தால் கார்த்தி சுப்புராஜ் எந்த நடிகருடனும் படத்தை எடுக்காமல் விஜய்சேதுபதி வைத்தே சினிமாவில் வாழ்ந்து விடுவார் என கிண்டல் செய்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்