சிறுவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்.. வெளிப்படையாக கூறிய ரசிகர்கள்

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 10 வயது சசிவர்ஷன் என்ற சிறுவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கினார். இதில் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டதால் தையல் போட வேண்டிய நிலை உருவானது. ஆனால் சிறுவனோ வலியில் தையல் போட அனுமதிக்காமல் அடம் பிடித்துள்ளான்.

அப்போது அவனுக்குப் பிடித்த நடிகரான விஜய்யின் பிகில் படத்தை செல்போனில் போட்டுக்காட்டி, சிறுவனுக்கு மயக்க ஊசி செலுத்தி தையல் போட்டு முடித்துள்ளனர். இது கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாக வெளியானது. இச்செய்தியை கண்ட விஜய் ரசிகர்கள் சிறுவன் குணமடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் அந்த சிறுவனுக்கு உடல்நிலை சரியானதும் நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளதாக விஜய் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த சிறுவன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

bigil
bigil

சிறுவன் மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். நடிகர் விஜய் சமீபகாலமாக தனது ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்