புருஷனின் அண்ணன் கொடுத்த அந்தரங்க தொல்லை.. நியாயம் கேட்டு போராடும் விஜய் டிவி நடிகை

Vijay Tv Actress: சின்னத்திரை சேனல்களை பொருத்தவரையில் சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும் எப்போதுமே ஒரு போட்டி இருக்கும். அதில் விஜய் டிவி ரசிகர்களை கவர புதுப்புது சீரியல்களையும் நிகழ்ச்சிகளையும் இறக்கி கொண்டே இருக்கும்.

அப்படி விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை தீபா. இவர் தற்போது தன்னுடைய கணவர் பற்றியும் அவருடைய குடும்பத்தினர் பற்றியும் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். ஏற்கனவே திருமணம் ஆகி 15 வயதில் இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

இந்நிலையில் இவர் கடந்த வருடம் விஜய் டிவியில் பணியாற்றிய சாய் கணேஷ் பாபு என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வருடங்களாக இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக அவர் சந்தோஷமாக தெரிவித்து இருந்தார்.

Also read: கதிரை மடக்க புது ட்ரிக்ஸ் பாலோ பண்ணும் ராஜி.. மாமியாரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய மருமகள்

ஆனால் தற்போது தன்னுடைய கணவர் வீட்டில் தன்னை தரக்குறைவாக நடத்துவதாகவும் பணம் நகைகளை வாங்கிக் கொண்டு பிரச்சனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி தன் கணவரை தூண்டிவிட்டு தன்னிடமிருந்து பிரிக்க பார்த்ததாகவும் எப்படியாவது எங்களை சேர்த்து வையுங்கள் எனவும் அவர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

மேலும் தன் கணவரின் அண்ணன் தனக்கு அந்தரங்க தொல்லை கொடுப்பதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதற்கு அவருடைய கணவர், அண்ணனை அனுசரித்து போனால் தான் இந்த குடும்பத்தில் என்னுடன் உன்னால் சந்தோஷமாக வாழ முடியும் என்று கூறி இருக்கிறார்.

இப்படி தீபா வெளியிட்டுள்ள இந்த செய்தி தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதல் திருமணம் தோல்வியில் முடிந்த நிலையில் தான் அவர் இந்த திருமணத்தை செய்து கொண்டார். ஆனால் அதுவும் இப்படி பிரச்சனையில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் தீபாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Also read: புத்தி கெட்ட புருசனை தலையில் அடித்து பாடத்தை புகட்டும் ராதிகா.. மாமியாரின் வாயை அடைத்த சக்காளத்தி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்