ஹாலிவுட் தரத்தில் கேமராவை பயன்படுத்தும் பீஸ்ட் படக்குழு.. ஷங்கர், ராஜமௌலி கூட இத யூஸ் பண்ணலையாம்

தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் பீஸ்ட் படம் மீதான எதிர்பார்ப்பு தான் கோலிவுட் வட்டாரத்தில் நிலவி வருகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது பீஸ்ட் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பீஸ்ட் படத்தில் விஜய் ராணுவ வீரராக நடிப்பதாகவும், தீவிரவாதிகளிடம் சிக்கும் மக்களை மீட்பதுதான் படத்தின் கதை எனவும் கூறப்படுகிறது.

இதுவரை 85 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் படப்பிடிப்பை காஷ்மீரில் எடுக்கத்திட்டமிட்டிருந்தனர். ஆனால், அங்கு பாதுகாப்பு காரணங்களால் படம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், காஷ்மீர், மற்றும் இந்தியா பாகிஸ்தான் எல்லையை செட்டிங்ஸ் மூலம் ஜார்ஜியாவில் எடுக்கவுள்ளார்களாம்.

இதற்காக படக்குழுவினர் மீண்டும் ஜார்ஜியா செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இதுவரை இந்தியாவில் எந்த ஒரு படத்திலும் பயன்படுத்தாத கேமராவை பீஸ்ட் படத்தில் பயன்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, மிகவும் விலை உயர்ந்த ரெட் வி ரேப்டர் கேமராவை முதன் முறையாக பீஸ்ட் படத்தில் பயன்படுத்தி உள்ளார்களாம்.

இதுவரை இத்த கேமராவை இந்தியாவில் யாரும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹமாசா அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வகை கேமராக்கள் மிகவும் விலையுயர்ந்த கேமராக்கள் ஆகும்.

இதன் விலை கிட்டத்தட்ட $24,500 அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகிறது. முதன் முறையாக இந்தியாவில் இந்த வகை கேமராவை பயன்படுத்தி பீஸ்ட் படம் எடுக்கப்பட்டு வருவதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். பிரம்மாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் மற்றும் ராஜமௌலி கூட இதுபோன்ற கேமராக்களை யூஸ் பண்ணுவது இல்லையாம்.

camera-beast
camera-beast
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்