மாநாடு படம் இவருக்கு 100வது படமாம்.. வெங்கட் பிரபு வெளியிட்ட சுவாரசிய தகவல்.

தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமல்லாமல் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கியவர் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

தற்போது சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இப்படத்தின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் அக்டோபர் மாதம் ஆயுத பூஜைக்கு மாநாடு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர்.

actor praveen
actor praveen

யுவன் சங்கர் ராஜ் இசையமைத்துள்ள மாநாடு படத்தின் எடிட்டிங் வேலைகளை பிரவீன் கேஎல் தான் கவனித்து வருகிறார். இவர் வெங்கட் பிரபுவின் பல படங்களில் பணியாற்றி உள்ளார். இந்நிலையில் இவரை பாராட்டி வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நாம் இருவரும் சேர்ந்தே தனது தொழிலை துவக்கினோம். இப்போதும் வலுவாக இணைந்திருக்கிறோம். மாநாடு படம் 100 வது படம் என்பதை அறிவிப்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். சென்னை 28 முதல் படம், மாஸ் 50 வது படம், இப்போது மாநாடு 100 வது படம். இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்ற கடவுள் அருள் புரியட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

வெங்கட் பிரபுவின் படங்கள் மட்டுமின்றி ஆரண்ய காண்டம், கந்தசாமி, காவியத் தலைவன், மெட்ராஸ், கபாலி, மகரிஷி, பைரவா, தோழா உள்ளிட்ட பல ஹிட் படங்களில் பணியாற்றி உள்ளார் பிரவீன். தற்போது 100 வது படமாக மாநாடு படத்தில் பணியாற்றி உள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்