மாநாடு வெற்றியால் வெங்கட்பிரபுவுக்கு அடித்த லக். அதகளபடுத்த காத்திருக்கும் அடுத்த தரமான சம்பவம்

வெங்கட்பிரபு சமீபத்தில் இயக்கி மாநாடு படம் சக்கைப்போடு போட்டு வசூலில் மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. சிம்பு ஹீரோவாக, ரீ என்ட்ரி கொடுத்த இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது. அவருக்கு நிகராக, எஸ் ஜே சூர்யாவும் இந்தப் படத்தில் வில்லன் ரோலில் அதகளபடுத்திருக்கிறார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

மாநாடு படம் கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. மேலும் இந்த படம் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து, இன்னும் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

வெங்கட் பிரபு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பிளாக்பஸ்டர் கொடுத்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது அனைத்து இடங்களில் இருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. மாநாடுபடம் மிகப் பெரிய வெற்றி பெற்றதையடுத்து, பல தயாரிப்பாளர்கள் வெங்கட்பிரபுவை நாடி கதை கேட்கிறார்கள்.

மிகுந்த உற்சாகத்தில் இருந்த வெங்கட்பிரபுவிற்கு பேரதிர்ச்சியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் செய்து பாராட்டியுள்ளார். அதுமட்டுமின்றி அடுத்த கதையை தமக்காக தயார் செய்யும்படி கூறியுள்ளார். இந்த செய்தியை கேட்ட வெங்கட் பிரபு திக்குமுக்காடி உள்ளார்.

Venkat-Rajini-Cinemapettai.jpg
Venkat-Rajini-Cinemapettai.jpg

இப்பொழுது வெங்கட் பிரபு தலைவர், கால் செய்துவிட்டார் அவருக்கென்று ஒரு மாஸ் சப்ஜெக்ட்டை ரெடி பண்ணும் முனைப்பில் உற்சாகத்துடன் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்