சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுப்பாரா ஷாலினி.? தன் பாணியில் பதில் அளித்த வெங்கட் பிரபு

ஷாலினி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். அதன்பின்பு விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். அமர்க்களம் படத்தில் நடித்ததன் மூலம் அஜித்துடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ஷாலினி திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். ஆனால் விஜய் மற்றும் அஜித் போன்றவர்களின் படம் வெளியானால் ஷாலினி தன் மகனுடன் திரையரங்குகளுக்கு செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும். சினிமாவில் மீது அவ்வளவு ஆர்வம் இருந்தாலும் மீண்டும் கம்பேக் கொடுக்காமல் உள்ளார்.

இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கிய மன்மதலீலை படத்தின் பிரமோஷனுக்காக ஒரு பேட்டி கொடுத்திருந்தார். தற்போது அஜித், ஷாலினி இருவரும் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தொகுப்பாளர் அந்த புகைப்படத்தை வெங்கட்பிரபுவிடம் காட்டி மீண்டும் ஷாலினி சினிமாவில் நடிப்பீர்களா, ஷாலினி வைத்து படம் இயக்குவீர்களா என்ற கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, எதுக்குடா ஃபேமிலி இல்ல வந்து கை வைக்கிற என்று அஜித் அடிப்பார் என கிண்டலாக சொல்லி இருந்தார். அதுமட்டுமல்லாமல் ஷாலினி குடும்பத்தைப் பார்ப்பதில் ரொம்ப பிசியாக இருப்பதாகவும், இரண்டு குழந்தைகளையும் கவனித்து வருகிறார். இதனால் கண்டிப்பாக ஷாலினி மீண்டும் சினிமாவில் நடிக்க வரமாட்டார் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

ஜோதிகாவும் அதேபோல் திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது குழந்தைகள் வளர்ந்தவுடன் மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஜோதிகாவை போல ஷாலினியும் மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். மீண்டும் ஷாலினி படங்களில் நடிப்பதற்கு அஜித், ஷாலினி இருவருக்குமே விருப்பமில்லாமல் உள்ளது . இந்நிலையில் வெங்கட்பிரபுவின் இந்த பதிலால் ஷாலினி மீண்டும் சினிமாவில் நடிக்கமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்