தமிழ் சினிமாவில் வட்டாரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வசுந்தரா. ஜெயம் ரவியுடன் இணைந்து பேராண்மை திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன் பிறகு விஜய் சேதுபதியுடன் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் இணைந்து நடித்தார்.
அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் பல வாய்ப்புகள் கிடைக்காததால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வந்தார் தமிழ் தாண்டி மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி பல படங்கள் நடித்தார்.
சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் வசுந்தரா அவ்வப்போது ஏதாவது ஒரு புகைப்படங்களை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு பெரிய அளவில் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தற்போது வசுந்தராவுக்கு ஒரு சில பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன ஆனால் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடித்து வருவதால் கிடைக்கும் பல வாய்ப்புகளை தற்போது மறுத்து வருகிறார். தற்போது புத்தன் இயேசு காந்தி எனும் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளது.
தற்போது வசுந்தரா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் சேலையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வசுந்தரா இப்படி ஆளே அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார் என ஆச்சரியத்தில் உள்ளனர். மேலும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.