Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மூன்றாவது புருஷனை அடித்து துரத்திய வனிதா.. பீட்டர் பாலுக்கு பீப்பி ஊதும் நெட்டிசன்கள்!

கொரோனா பாதிப்பினால் மக்கள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது போது பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டு அஜால் குஜால் ஆட்டம் போட்டவர் தான் நடிகை வனிதா.

அதோடு நிறுத்திக்கொள்ளாமல், கோவாவில் குடியும்  கூத்துமாய் கணவனின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் கேலிக்கூத்து ஆளானார்.

எனவே, ‘கொஞ்ச ஆட்டமா போட்ட’ என்று கிண்டல் அடிக்கும் அளவுக்கு வனிதா வீட்டில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

என்னவென்றால், கோவாவில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் பீட்டர் பால் போதையில் செய்த லூட்டி தாங்கமுடியாமல் வெளு வெளுன்னு வெளுத்துட்டு, போடா கெழட்டுப் பயலேன்று  நடு ரோட்டிலேயே அம்போன்னு விட்டுட்டு, அந்த ஜென்மம் கிளம்பிடுச்சு.

இது எந்த அளவிற்கு உண்மை என்று  நெட்டிசன்கள் மண்டையை பிச்சுகிட்ட போது தயாரிப்பாளர் ரவீந்திரன் திடிரென்று சமூக வலைதளங்களில் “எல்லாருடைய வார்த்தையும் உண்மை ஆயிடுச்சு..வீட்டிலிருந்து ரோட்டுக்கு துரத்தப்பட்ட பீட்டர் பால்.. பீ பீ” என்று  பதிவிட்டு நடந்த சம்பவத்தை உண்மையாக்கினார்.

தற்போது வனிதாவின் சுயரூபம் தெரிந்ததும் பீட்டர் பால் வீட்டிற்கு செல்லாமல் அங்கங்க இருக்கும் பார்க்கிங் ஏரியாவில் குடிச்சிட்டு படுத்து உருண்டுகிட்டு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து  செய்திகள் வெளியாகி உள்ளது.

இதையெல்லாம் கேட்டபிறகு ‘ஆடிய ஆட்டமென்ன..? பேசிய வார்த்தை என்ன..?’ என்ற பாடல்தான் மனதில் ஒலிக்கிறது.

அதற்கேற்றார்போல்  நெட்டிசன்களும் ‘4-வது ஆடு தயாராகி இருக்குமோ?’, ‘பீட்டர் பாலுக்கு இனி வரும் ராத்திரி எல்லாம் தனி ராத்திரி தான்’ என்று இவர்களை வைத்து  தீபாவளியை கொண்டாட தொடங்கிவிட்டனர்.

Continue Reading
To Top