விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதா.. வக்காலத்து வாங்கும் ரம்யாகிருஷ்ணன்

விஜய் டிவி கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர்ஸ் போன்ற பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. இந்த வரிசையில் சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற புதிய நடன நிகழ்ச்சியை தொடங்கியது. இதில் நடிகை வனிதா விஜயகுமார் போட்டியாளராக பங்கேற்று வந்தார்.

நிகழ்ச்சி தொடங்கி நான்கு எபிசோடுகளே முடிந்த நிலையில் திடீரென வனிதா விஜயகுமார் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக ஒரு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். நிகழ்ச்சியில் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும், மோசமாக நடத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து இந்நிகழ்ச்சியின் நடுவராக உள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் குறைவான மதிப்பெண் வழங்கியதே வனிதா நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதற்கு காரணம் என வதந்திகள் பரவி வந்தன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரம்யா கிருஷ்ணன், “போட்டியில் நான் 10க்கு ஒரு மதிப்பெண் கொடுத்ததெல்லாம் ஒரு காரணம் எனக் கூறுகிறார்கள். இதெல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது. மற்றபடி அவர் ஏன் விலகினார் என்று அவரிடமே கேளுங்கள்” என்று கூறியுள்ளார்.

ramya krishna vanitha vijayakumar
ramya krishna vanitha vijayakumar

ரம்யா கிருஷ்ணன் பேசியதை பார்க்கும்போது எங்கள் மீதும், தொலைக்காட்சி மீது எந்த தவறும் இல்லை வனிதா மீதுதான் முழுத் தவறு என்பது போல் மறைமுகமாக கூறியுள்ளதாக தெரிகிறது. இதனைப் பார்க்கும்போது விஜய் டிவிக்கு ரம்யாகிருஷ்ணன் வக்காலத்து வாங்குகிறார் ஆகியன உண்மை அறிந்த ஒரு சிலர் கூறி வருகின்றனர்

இருப்பினும் வனிதா வெளியிட்டிருந்த அறிக்கையில் பெண்களே சக பெண்களை மோசமாக நடத்துகிறார்கள் என குறிப்பிட்டிருந்தார். இதனால், வனிதா மறைமுகமாக ரம்யா கிருஷ்ணனைத்தான் கூறியுள்ளார் என வனிதாவின் ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.

ராஜமாதா ரம்யா கிருஷ்ணாவிடமே வனிதா மோதுகிறாரா? என மற்றொரு தரப்பினர் பேசி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்