மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை.. எத்தனை ரெட்கார்டு போட்டாலும் திருந்தாத வடிவேலு

வைகைப்புயல் வடிவேலு ரெட் கார்ட் தடை நீங்கி இப்போதுதான் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இது தவிர மாமன்னன், சந்திரமுகி 2 என அடுத்தடுத்த படங்களும் லைன் அப்பில் உள்ளது.

இந்நிலையில் ரஜினி, வடிவேலு காமினேஷனில் வெளியான சந்திரமுகி படம் வேற லெவல் ஹிட்டானது. இப்போது லாரன்ஸ் உடன் சந்திரமுகி 2 படத்தில் வடிவேலு கூட்டணி போட உள்ளார். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தான் தயாரிக்கிறது.

Also Read : உன்னால முடிஞ்சத பாத்துக்கோ என மதிக்காமல் பேசிய வடிவேலு.. சைலண்டா ஆப்பு வச்சு விட்ட இயக்குனர்

அதேபோல் வடிவேலு கதாநாயகனாக நடித்து வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. வடிவேலுவின் துரதிஷ்டமா என்று தெரியவில்லை நாய் சேகர் மற்றும் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு ஒரே நாளில் வந்துள்ளது.

இந்நிலையில் வடிவேலு சந்திரமுகி 2 படத்தை விட்டுவிட்டு தான் ஹீரோவாக நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படப்பிடிப்புக்கு சென்று விட்டாராம். அதுமட்டுமின்றி சாதாரணமாகவே சந்திரமுகி 2 ஷூட்டிங் இருந்தால் வடிவேலு அதற்கு பெருமளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லையாம்.

Also Read : வடிவேலுவை ஓரம் கட்ட வரும் காமெடி நடிகர்.. ரீ என்ட்ரியில் தரமான சம்பவம் இருக்கு

மேலும் இயக்குனர் பி வாசுவிடமும் வடிவேலு எடுத்தறிந்து பேசி வருகிறாராம். இதனை அறிந்த லைக்கா வடிவேலுவிடம் நீங்கள் முதலில் சந்திரமுகி 2 படத்தின் ஷூட்டிங் முடித்த பின்பு நாய் சேகர் படத்துக்கு வாருங்கள் என பஞ்சாயத்து பண்ணி உள்ளது.

அதையும் காதில் வாங்காத படியே செல்கிறாராம் வடிவேலு. ஏற்கனவே இப்படிதான் ஷங்கர் தயாரித்த படத்தின் படப்பிடிப்புக்கு வடிவேலு வரவில்லை என ரெட் கார்ட் தடை போடப்பட்டது. மீண்டும் பழையபடி இவ்வாறு வடிவேலு செய்து வருவதால் அவருக்கு ரெட் கார்ட் திரும்ப போட்டாலும் ஆச்சரியப்படுவதில்லை என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Also Read : பெரும் முதலாளிகளை கதறவிடும் வடிவேலு.. எங்க பேனர்ல நடிக்க வேண்டாம் என கையெடுத்துக் கும்பிட்ட நிறுவனம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்