வடிவேலு போட்ட பக்கா பிளான்.. உதயநிதிக்கு ஓகே சொன்னதற்கு காரணம் இதுதானா

நடிகர் வடிவேலு படங்களில் மீண்டும் எப்போது நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் வந்தாலும் வடிவேலு இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. பெரியவர் முதல் சிறியவர் வரை அனைத்து வயதினரும் ரசிக்கும்படி இவரது காமெடி இருக்கும்.

கடந்த 4 ஆண்டுகளாக வடிவேலு படங்களில் நடிக்காததால் மீண்டும் அவரது வருகைக்காக ரசிகர்கள் காத்திருந்தார்கள். தற்போது வரிசையாக வடிவேலுக்கு பல படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது. ஆனால் வடிவேலு இளம் மற்றும் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

சிவகார்த்திகேயனின் டான் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அசோக் குமார் இயக்கத்தில் சிங்கப்பாதை படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு நடித்தால் நன்றாக இருக்கும் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இதனால் வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. பலரும் வற்புறுத்தியும் இப்படத்தில் நடிக்க வடிவேலு மறுத்துவிட்டாராம்.

இனிமேல் படங்களில் ஹீரோவாக தான் நடிக்க விரும்புவதால் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க மறுத்து விட்டார் என எண்ணிய நிலையில் தற்போது உதயநிதி படத்தில் வடிவேலு நடிக்க சம்மதித்துள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடிக்க உள்ளார். அதேபோல் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளார். இப்படத்தில் உதயநிதியுடன் முதல்முறையாக வடிவேலு கூட்டணி போட உள்ளார். உதயநிதி படத்தில் நடித்தால் பிரச்சனை ஏதும் வராது என்பதால் இவர் படத்தில் வடிவேலு நடிக்க சம்மதித்துள்ளார் என்ன திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்