காதலனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ராஜன் பொண்டாட்டி.. கடைசியில் திருமணத்தை குறித்து எடுத்த அதிர்ச்சி முடிவு

Vada Chennai movie Rajan Pondaati was victimized by her boyfriend: ‘காதலாவது கத்திரிக்காவாவது’ என்று பிரபல நடிகை ஒருவர் லவ் என்றாலே அறவே வெறுக்கிறார். அந்த அளவிற்கு பிரபல அரசியல் வாரிசு நடிகர் இவருடைய வாழ்க்கையை, காதல் என்கிற பெயரில் சின்னபின்னமாகி இருக்கிறார். இதனால் மன அளவிலும் உடல் அளவிலும் நடிகை மிகுந்த வேதனையை அனுபவித்ததாக கூறியுள்ளார்.

மிகவும் திறமையான நடிகையாக பார்க்கப்படுபவர் தான் நடிகை ஆண்ட்ரியா. இவர் முதலில் பாடகியாகி இருந்து பின் நடிகையாக மாறினார். அதிலும் இவர் பாடிய வெஸ்டர்ன் பாடல்கள் இளசுகளை ரொம்பவே குதுகலபடுத்தியது. அதோடு பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் பிரபலமாகி, பின்னர் பாடகியாகவும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் திரையுலகில் ரவுண்டு கட்டினார்.

தமிழில் சில வெற்றி படங்கள் கொடுத்த பிறகு, தெலுங்கு படங்களிலும் பாடிய ஆண்ட்ரியா. அதிலும் வடசென்னை படத்தில் ராஜன் பொண்டாட்டியாக ஆண்ட்ரியா நெகட்டிவ் கேரக்டரில் பிச்சு உதறினார். இவருடைய மார்க்கெட் அந்த சமயத்தில் எகிறியது. இவர் என்ன அளவிற்கு உணர்ச்சிபூர்வமான பாடல்களை பாடினாரோ அதே அளவிற்கு அவருடைய வாழ்க்கையிலும் பல உணர்ச்சி பூர்வமான வலிகளை சந்தித்திருக்கிறார்.

இவர் பிரபல அரசியல் வாரிசு நடிகரின் காதல் வலையில் சிக்கி ஏமாந்தார். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, சில வருடங்களாகவே கிடைத்த பட வாய்ப்புகளை எல்லாம் தட்டி கழித்து நடிக்காமல் இருந்து வந்தார். அதன் பின் மீண்டும் தன்னுடைய செகண்ட் இன்னிங்சை துவங்கி நடிப்பு, பாடல் என செம பிசியாக இருந்து வருகிறார்.

Also Read: பட வாய்ப்பு இல்லாததால் கமல் கைபிடித்து தூக்கி விட்ட 6 நடிகைகள்.. த்ரிஷாக்கு அடித்த ஜாக்பாட்

காதலனால் பாதிக்கப்பட்ட ஆண்ட்ரியா

இதற்கிடையில் இயக்குனர் அனிருத் மற்றும் நடிகர் தனுஷ் இருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி கிசுகிசுக்கப்பட்டது. இவர்கள் மட்டுமல்ல கமலஹாசன், உதயநிதி ஸ்டாலின் என ஆண்ட்ரியாவின் காதலர்களின் லிஸ்ட் பெருசா போனது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் 38 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பதை கூறியிருக்கிறார்.

30 வயசு ஆகும்போது எனக்கு திருமண ஆசை வந்தது. ஆனால் இப்போது அந்த எண்ணமே எனக்கு இல்லை, இப்ப திருமண வயசை தாண்டி விட்டேன். ஒரு கட்டத்தில் எனக்கு திருமணம் ஆகவில்லை என்று வருத்தப்பட்டேன் ஆனா கடந்த சில வருடங்களாக திருமணம் செய்து கொண்ட சிலர் மகிழ்ச்சியாக இல்லை.

நிறைய பேர் திருமணம் செய்து கொள்ளாமல் செம ஜாலியாக இருக்கிறார்கள். என்னுடைய காதலன் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஏற்படுத்திய துன்பத்திலிருந்து சில வருடங்களாக முடங்கி போய், இப்போதுதான் மீண்டு வந்துள்ளேன்’ என்று சமீபத்திய பேட்டியில் ஆண்ட்ரியா வெளிப்படையாக பேசினார்.

Also Read: மற்ற நடிகைகளுக்காக பாடகியாக மாறிய 4 ஹீரோயின்கள்.. லட்சுமி மேனனை குத்தாட்டம் போட வைத்த ரம்யா நம்பீசன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்